இன்னும் எதுவும் முடியவில்லை.. மக்களுக்காக தொடர்ந்து போராட போகிறேன்.. அதிபர் டிரம்ப் பரபரப்பு பேட்டி!
நியுயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் முடியவில்லை, மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் பிடன் வெற்றி குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது.
முறைகேடு
இந்த நிலையில் அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துவிட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அவர் அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் முடியவில்லை. மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன். பிடன் வெற்றிபெற்றுவிட்டதாக தவறாக தகவல்கள் பரப்பப்படுகிறது. 4 மாகாணங்களில் இன்னும் முழுமையான முடிவுகள் வரவில்லை
நியாயம்
அமெரிக்க மக்களுக்கு நியாயம் கிடைக்க போராடுவேன். ஜார்ஜியாவில் இப்போது மறு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதற்குள் பிடன் வெற்றிபெற்றுவிட்டதாக தவறாக பரப்பப்படுகிறது. அமெரிக்க மக்களிடம் நேர்மையாக, வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை அவசியம். வாக்குகளை எண்ணுவதிலும், முடிவுகளை அறிவிப்பதிலும் நேர்மை அவசியம். இந்த ஒரு தேர்தல் மட்டுமின்றி... மொத்தமாக எல்லா தேர்தலிலும் வெளிப்படைத்தன்மை அவசியம்.
வெளிப்படைத்தன்மை
ஆனால் இப்போது அந்த வெளிப்படைத்தன்மை இல்லை. தொடக்கத்தில் இருந்தே நாங்கள் ஒரே கோரிக்கையை மட்டுமே வைத்து வருகிறோம். முறையான வாக்குகள் அனைத்தையும் என்ன வேண்டும், முறையின்றி பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ண கூடாது. ஆனால் எங்களின் இந்த சாதாரண கோரிக்கையை கூட ஏற்கவில்லை.
முறைகேடுகள்
பென்சில்வேனியா வாக்கு எண்ணிக்கையில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. அந்த முறைகேடுகளை களைய வேண்டும். இந்த தேசத்திற்கான சண்டையை நிறுத்த மாட்டேன். முறையான தேர்தல் முடிவுகள் வரை சண்டை தொடரும். இந்த தேர்தல் இன்னும் முடியவில்லை.