அணு சக்தியை காலி பண்ணுங்க.. டிரம்ப் குரூரமான முடிவு.. ஈரான் மீது பயங்கர அட்டாக்.. பென்டகன் பிளான்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஈரானுக்கு எதிராக அதிபர் டிரம்ப்பிற்கு முன்னர் இல்லாத வகையில், விரிவான ராணுவத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆப்ஷன்களை பென்டகன் அவருக்கு வழங்கியுள்ளது. இந்தத் ஆப்ஷன்களில் ஈரானின் அணு மற்றும் ஏவுகணை தளங்கள் மீதான தாக்குதல்களும் அடங்கும்.

ஈரானில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில், ராஜதந்திரம் அல்லது ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது என்ற முக்கிய தேர்வு டிரம்ப்பிற்கு உள்ளது. ஈரானின் அணு அமைப்புகளை ஏற்கனவே தாக்கிவிட்டதாக அமெரிக்கா கூறிய நிலையில் தற்போது மீண்டும் ஈரானின் அணு ஆயுத அமைப்புகளை அமெரிக்கா தாக்கும் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.

Israel Iran

ஈரானின் அணு ஆயுத அமைப்பு மீது தாக்குதல்

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இஸ்லாமியக் குடியரசு ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை ஈரான் அரசு ஒடுக்கி வரும் நிலையில், அந்நாட்டை இலக்கு வைக்க பென்டகன் பல ஆப்ஷன்களை ஆய்வு செய்து வருகிறது. இதில், முந்தைய அமெரிக்கத் தாக்குதலைப் போலவே, ஈரானிய அணுசக்தி வசதிகள் மீது மீண்டும் ஒரு தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளும், இணையவழித் தாக்குதல்கள் போன்ற குறிப்பிட்ட நடவடிக்கைகளும் அடங்கும். ஜனாதிபதி டிரம்ப் செவ்வாய்க்கிழமை இது குறித்த முறையான இராணுவ விளக்கத்தைப் பெற திட்டமிட்டிருக்கிறார்.

இந்த ஆப்ஷன்களில், ஈரானின் அணுசக்தி திட்ட தளங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள் போன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் அடங்கும். ஃபோர்டோ, நடன்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய அணுசக்தி வசதிகளை இலக்காகக் கொண்ட ஜூன் 22 அன்று நடந்த B2 குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதலை விட இவை மிகவும் விரிவானதாக இருக்கலாம்.

மற்ற ஆப்ஷன்களில், இணையவழித் தாக்குதல்கள் அல்லது வரையறுக்கப்பட்ட ராணுவத் தாக்குதல்கள் ஆகியவை அடங்கும் என ஒரு அதிகாரி விவரித்தார். இத்தாக்குதல்கள், இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) தலைமையிலான ஈரானின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பை, குறிப்பாக போராட்டங்களை அடக்குவதில் ஈடுபட்டுள்ள பசிஜ் மிலிஷியா படைகளை குறிவைக்கும். பரந்த இராணுவ மோதலைத் தூண்டாமல், ஒரு தடுப்புச் செய்தியை அனுப்புவதே இதன் நோக்கம்.

பசிஜ் மிலிஷியா படைகளை குறிவைக்கும் தாக்குதல்கள்

ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் வான்வெளி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவி வருகிறது. இதனால் அங்கு உள்ள அமெரிக்க மக்களை வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவிட்டு உள்ளது.

ஈரானில் நிலவும் அமைதியின்மையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சாத்தியமான தாக்குதல் ஆப்ஷன்கள் குறித்து ஆலோசிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக, 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்று வரும் மிகப் பெரிய நாடளாவிய போராட்டங்களின் மூன்றாவது வாரத்தை எட்டி உள்ளது. தொடர் போராட்டங்களை ஈரான் எதிர்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு வெளியாகி உள்ளது.

"நாங்கள் ஈரான் விவகாரத்தை மிகவும் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ராணுவம் அதைப் பரிசீலித்து வருகிறது, மேலும் சில வலுவான விருப்பங்களை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் விரைவில் ஒரு முடிவுக்கு வருவோம்," என்று டிரம்ப், தனது மார்-எ-லாகோ இல்லத்திலிருந்து வாஷிங்டன் திரும்பியபோது செய்தியாளர்களிடம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+