"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி
தெஹ்ரான்: "ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் இனி அனைத்து வகையான கச்சா எண்ணெய் டாங்கர்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்திற்கும் முற்றிலும் மூடப்படுகிறது. இந்த உத்தரவை மீறி எந்தவொரு கப்பல் நுழைய முயன்றாலும், அது எங்கள் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்படும்!" அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 8-ம் தேதி கொண்டு வரப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பெரியளவில் தாக்குதல்கள் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மீண்டும் ஒரு போர் வெடிக்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

மாறி மாறி தாக்குதல்
இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே ஈரானின் பல்வேறு ராணுவ நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக, கடந்த செவ்வாயன்று ஈரானின் தெற்குத் துறைமுக நகரான பண்டார் அப்பாஸ், கெஷ்ம் தீவு மற்றும் சிரிக் பகுதிகளில் அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில், சுமார் 20,000 பேருக்குக் குடிநீர் வழங்கும் நீர்த் தேக்கங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளன.
இந்தத் தாக்குதல்களைத் தற்காப்பு நடவடிக்கை என்று சொல்லும் அமெரிக்காவின் சென்ட்காம் அமைப்பு, "திங்கள்கிழமை அன்று ஹார்முஸ் ஜலசந்திக்கு மேல் பறந்த அமெரிக்காவின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான சரியான பதிலடி இது" என்று கூறியுள்ளது. அமெரிக்காவுக்குப் பதிலடியாக, ஈரான் ராணுவம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தளம் மீது அதிரடியாக ட்ரோன் தாக்குதலை நடத்தியதுடன், ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிப் பழிவாங்கியுள்ளது.
கடுமையான தாக்குதல்
ஈரானை மிகக் கடுமையாகத் தாக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார். இது குறித்து அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஒரு சிறந்த அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்குக் காட்டிய கால அவகாசத்தை ஈரான் வீணடித்துவிட்டது. இப்போது அவர்கள் அதற்கான விலையைக் கொடுத்து தான் ஆக வேண்டும்" என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மறுபுறம், அமெரிக்காவின் இந்த சட்டவிரோதத் தாக்குதல்களால் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் பயனற்றதாகிவிட்டது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் சாடியுள்ளது.
பாதிப்பு மோசம்
மத்தியக் கிழக்கு அரேபிய வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் உலகச் சந்தைக்குச் செல்வதற்கான ஒரே கடல் வழித்தடம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி மட்டும்தான். சாதாரணக் காலங்களில், உலகெங்கும் விற்கப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி ஆகியவற்றில் 20 சதவீதம் இந்த ஒற்றை வழித்தடம் வழியாகத்தான் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது. தினமும் சராசரியாக 20 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்த வழியைக் கடந்து சென்றது.
ஏற்கனவே இந்த விவகாரத்தால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 93 டாலரை தாண்டி எகிறியுள்ள நிலையில், இந்த முழுமையான மூடல் அறிவிப்பு உலகப் பொருளாதாரத்தைப் பெரும் மந்தநிலைக்குள் தள்ளும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மீண்டும் அறிவிப்பு
அதாவது போர் தொடங்கிய போதே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக அறிவித்தது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு அதில் சில தளர்வுகளை ஈரான் அறிவித்திருந்தது. அதேநேரம் ஈரானுக்கு எந்தவொரு கப்பலும் செல்லாமல் இருக்கும் வகையில் அமெரிக்கா ஹார்முஸை முற்றுகையிட்டிருந்தது. இந்தச் சூழலில் தான் மீண்டும் போர் வெடித்துள்ளதால் ஹார்முஸை முழுமையாக மூடுவதாக ஈரான் மீண்டும் அறிவித்துள்ளது.
-
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காலையிலேயே குலுங்கிய ஈரான்.. கியூபாவில் 150 ஆண்டுகளில் இல்லாத அதிர்வு -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு!












Click it and Unblock the Notifications