விண்ணுக்கு செல்லும் 2 நாசா வீரர்கள்.. ராக்கெட் திடீரென வெடித்தால் என்ன நடக்கும்? எலோன் விளக்கம்!
நியூயார்க்: இன்று ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணுக்கு இரண்டு நாசா வீரர்கள் விண்ணுக்கு செல்ல நிலையில், அந்த ராக்கெட்டுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்று ஸ்பேஸ் எக்ஸ் விளக்கி உள்ளது.
Recommended Video
நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் இன்று சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட உள்ளனர். நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் செல்ல இருக்கிறார்கள்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் இவர்கள் விண்ணுக்கு செல்கிறார்கள்.அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் Kennedy Space Center's Complex 39A இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்ட உள்ளது.

யார் இவர்கள்
ஃபல்கான் 9 ராக்கெட் அதிகாலை 2.30 மணிக்கு விண்ணுக்கு செல்கிறது. இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ராக்கெட் ஆகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்புகிறது. நாசாவின் இரண்டு வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் விண்ணுக்கு அனுப்புகிறது. நாளை காலை 11.30 மணிக்கு இவர்கள் இருவரும் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன ராக்கெட்
ஃபல்கான் 9 ராக்கெட்டின் முன் பக்கத்தில் க்ரூ டிராகன் (Crew Dragon) என்ற பகுதி இருக்கும். இதில்தான் விண்வெளி வீரர்கள் இருப்பார்கள். இதில் 7 வீரர்கள் வரை இருக்க முடியும் . ஆனால் அமெரிக்கா இந்த முறை இரண்டு விண்வெளி வீரர்களை மட்டுமே அனுப்புகிறது. அதில் இருக்கும் மற்ற இடங்களில் முக்கிய ஆராய்ச்சி பொருட்கள், ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருப்பவர்களுக்கு உணவுகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

ஏஐ தொழில்நுட்பம் செயல்படும்
இந்த இடத்தில் அமர்ந்துதான் வீரர்கள் ராக்கெட்டில் செல்வார்கள். நாசாவின் வடிவமைப்பான இதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. இதன் உட்பக்கம் முழுக்க முழுக்க தொடு திரைகளால் ஆனது. அதேபோல் இது முழுக்க முழுக்க ஆட்டோமெட்டிக்காக இயங்க கூடியது. அதேபோல் இது ஏஐ தொழில்நுட்பம் மூலம் இயங்க கூடியது. அதனால் வீரர்களுக்கு உள்ளே பெரிய அளவில் வேலை இருக்காது.

க்ரூ டிராகன் முக்கியம்
அதேபோல் இந்த க்ரூ டிராகன் (Crew Dragon) விண்வெளிக்கு சென்றதும் தானாக விண்வெளி மையத்தில் இணைத்து விடும், எதுவும் செய்யாமல் அதுவாகவே விண்வெளி மையத்தில் இணைந்து விடும். வீரர்கள் எதுவும் செய்யாமல் ஆட்டோமெட்டிக்காக இது சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைந்து விடும். இந்த நிலையில் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும் போது அது வெடித்தால் என்ன ஆகும் என்று கேள்வி எழுந்துள்ளது.

வெடித்தால் ஆகும்
அதாவது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட பின் அது வெடித்து சிதறினால் என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இப்படி ராக்கெட் வெடித்து சிதறினால் இந்த முறை வீரர்கள் யாரும் பலியாக மாட்டார்கள். ஏனென்றால் ராக்கெட் வெடித்த அடுத்த நொடியில், அதில் இருந்து க்ரூ டிராகன் (Crew Dragon) பிரிந்து சென்று விடும். இதனால க்ரூ டிராகனுக்கு (Crew Dragon) எதுவும் பாதிப்பு ஏற்படாது.

பாதுகாப்பு இருக்கும்
உடனே க்ரூ டிராகன் (Crew Dragon) இயக்கப்பட்டு அது தனியாக பறந்து சென்றுவிடும். இதன் மூலம் க்ரூ டிராகன் (Crew Dragon)ல் இருக்கும் வீரர்கள் பாதுகாக்கப்படுவர்கள். பின் அந்த க்ரூ டிராகன் (Crew Dragon) பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கும். இதனால் இந்த ராக்கெட் வெடித்து சிதறி, அசம்பாவிதம் ஏற்பட்டாலும், வீரர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications