கூடுதல் டேட்டா தேவை.. கோவாக்சினுக்கு அவசர அனுமதி தராத "ஹு".. இறுதி முடிவு எப்போது எடுக்கப்படும்?
நியூயார்க்: இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு இருக்கும் கோவாக்சின் வேக்சினுக்கு உலக சுகாதார மையம் நேற்றும் அவசர அனுமதி வழங்கவில்லை. இதுவரை 4 முறை சந்திப்பு கூட்டம் நடத்தியும் கோவாக்சினுக்கு அவசர அனுமதி கிடைக்கவில்லை.
ஒரு கொரோனா வேக்சினுக்கு உலக சுகாதார மையத்தின் அவசர அனுமதி கிடைப்பது மிக முக்கியம். அப்போதுதான் அந்த வேக்சின் எடுத்தவர்கள் எளிதாக வெளிநாடு செல்ல முடியும், அவசர அனுமதி இல்லை என்றால் அந்த வேக்சின் இன்னும் உலக சுகாதார மையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தம்.
வேக்சினுக்கான அவசர அனுமதி என்பது அதன் திறன், பாதுகாப்பு, தரம், ஒவ்வொரு நாட்டு இனக்குழு மக்களிடம் எப்படி செயல்படுகிறது என்பதை வைத்து வழங்கப்படும். இந்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் ஒரு வேக்சின் நிறுவனம் உலக சுகாதார மையத்திடம் தரவுகளை வழங்க வேண்டும்.

மறுப்பு
ஆனால் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு இருக்கும் கோவாக்சின் வேக்சினுக்கு தொடர்ந்து உலக சுகாதார மையம் அவசர அனுமதி தர மறுத்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய அவசர அனுமதிக்கான ஆலோசனை இன்னும் முடியவில்லை. இதுவரை 4 முறை மீட்டிங்குகள் நடந்துள்ளது. ஆனாலும் அவசர அனுமதி கிடைக்கவில்லை.

காரணம் என்ன
கோவாக்சின் குறித்து கூடுதல் விவரங்களை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் கேட்டு வருகிறது. கடந்த மாதம் 27ம் தேதி பாரத் பயோடெக் நிறுவனம் இது தொடர்பாக அனைத்து தரவுகளையும் வழங்கிய போதிலும் கூடுதலாக பாதுகாப்பு அம்சம் குறித்து ஒரு தகவல் மிஸ் ஆவதாக உலக சுகாதார மையம் தெரிவித்தது. இதனால் உடனே பாரத் பயோடெக் நிறுவனம் போன வாரம் அந்த தகவலை அனுப்பியது.
Recommended Video

ஆனால் மீண்டும் மறுப்பு
இந்த நிலையில் நேற்று இரவு நடந்த ரிவ்யூ மீட்டிங்கில் கோவாக்சினுக்கு மீண்டும் அவசர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேக்சின் பயன்பாட்டின் ரிஸ்க் மற்றும் பாதுகாப்பு குறித்து டேட்டா மற்றும் உறுதி பத்திரத்தை பாரத் பயோடெக் வழங்கவில்லை. அதாவது இந்த வேக்சின் எடுத்தால் எவ்வளவு ரிஸ்க், என்ன ரிஸ்க் என்பது குறித்த விவரங்களை தரவில்லை என்று கூறப்படுகிறது.

கோரிக்கை
இந்த தகவலை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் உலக சுகாதார மையம் கேட்டுள்ளது. இந்த தகவல் ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் கிடைத்த பின் வரும் நவம்பர் 3ம் தேதி கடைசி ரிவ்யூ மீட்டிங் நடக்கும். இதில் பெரும்பாலும் கோவாக்சினுக்கு அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications