ரொம்ப கொடுமை.. வெறும் 30 வயசுதான்.. மூச்சுவிட முடியாமல் திணறி திணறியே.. ஓடும் விமானத்தில் சோகம்!
ஓடும் விமானத்தில் உயிரிழந்த இளம்பெண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது
நியூயார்க்: வெறும் 30 வயசுதான்.. மூச்சுவிட முடியாமல் திணறி திணறியே விமானத்தில் உயிரிழந்த பெண்ணின் மரணம் குறித்த பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் ஜூலை மாதம் அமெரிக்காவின் அரிஜோனாவில் இருந்து டெக்ஸாஸ் மாநிலத்துக்கு ஒரு விமானம் புறப்பட தயாராக இருந்தது.
அப்போது, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விமானத்தில் இருந்தார்.. திடீரென தனக்கு மூச்சு விட முடியவில்லை என்று கூறினார்.. அதனால், பதறி போன விமான ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு உடனடியாக ஆக்ஸிஜன் தந்தனர்.
அவருக்கு ஏற்கனவே உடல்ரீதியாக பல பிரச்சனைகள் இருந்துள்ளதாகவும் தெரிகிறது. ஆக்ஸிஜன் தந்தும் அந்த பெண், திணறி திணறியே உயிரிழந்துவிட்டார்.. இதையடுத்து அந்த பெண்ணின் மரணம் குறித்த விசாரணையும் ஆரம்பமானழத.. தற்போது, அவர் கொரோனா வைரஸ் காரணமாகவே உயிரிழந்தததாக மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அவருக்கு ஏற்கனவே உடல்ரீதியாக பல பிரச்சனைகள் இருந்துள்ளதாகவும் தெரிகிறது. ஆக்ஸிஜன் தந்தும் அந்த பெண், திணறி திணறியே உயிரிழந்துவிட்டார்.. இதையடுத்து அந்த பெண்ணின் மரணம் குறித்த விசாரணையும் ஆரம்பமானது.. தற்போது, அவர் கொரோனா வைரஸ் காரணமாகவே உயிரிழந்ததாக மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையேதான், இந்த மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதியும் உறுதிபடுத்தி உள்ளார்.. அதை பற்றி அவர் சொல்லும்போது, உயிரிழந்த பெண் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கார்லண்டு என்ற பகுதியில் வசித்து வந்தவர் என்கிறார்கள்.