நீலகிரி அரசு ஊழியரை மயக்கிய இளம் பெண்.. ஒரே நாளில் 20 லட்சம் சம்பாத்தியம்.. ட்விஸ்ட்
ஊட்டி: இப்போது இந்தியா முழுவதுமே டேட்டிங் செயலிகள் ஏக பிரபலமாகி வருகின்றன. அதில் தனது சுய விவரங்களை பதிவு செய்து பெண்களுடன் டேட்டிங் செய்ய இப்போது பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் டேட்டிங் செயலியை பயன்படுத்துவது அதிகமாக உள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர், டேட்டிங் செயலியில் தனது சுய விவரங்களை பதிவு செய்து பெண்களுடன் டேட்டிங் செய்ய விரும்பினார். அவருக்கு 20 லட்சம் பறிபோயிருக்கிறது.
டேட்டிங் செயலிகள் மூலம் நடக்கும் மோசடிகள் தற்போது அதிகரித்து வருகின்றன. அழகான பெண்களின் புகைப்படங்களை இணையத்திலிருந்து எடுத்து, போலி பெயர்களில் கணக்குகளைத் தொடங்குவார்கள். உங்களைக் கவரக்கூடிய வகையில் பேசத் தொடங்கி, மிகக் குறுகிய காலத்திலேயே அதிக நெருக்கமானவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள்.முதலில் உங்களிடம் அன்பாகப் பேசுவார்கள்.

50 லட்சம் வரை முதலீடு
பிறகு தாங்கள் பெரிய அளவில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதாகக் கூறுவார்கள். உங்களை ஒரு போலி இணையதளத்தில் முதலீடு செய்ய வைப்பார்கள். ஆரம்பத்தில் ஒரு சிறிய லாபத்தைக் காட்டி (உதாரணமாக ₹40,000-க்கு ₹5,000 லாபம்), உங்களை பெரிய தொகையை (₹20 முதல் 30 அல்லது 50 லட்சம் வரை) முதலீடு செய்யத் தூண்டுவார்கள். பெரிய தொகையைச் செலுத்தியவுடன் அந்த நபர் மறைந்துவிடுவார். இப்படியான மோசடிகள் அதிகமாக நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
டேட்டிங் செயலி
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர், டேட்டிங் செயலியில் தனது சுய விவரங்களை பதிவு செய்து பெண்களுடன் டேட்டிங் செய்ய தயாராக இருந்துள்ளார். அப்போது பெங்களூருவைச் சேர்ந்த ஜெயஸ்ரீ ஸ்வேதா என்ற பெயரில் இளம்பெண் ஒருவர் அரசு அதிகாரியுடன் செயலி மூலம் அறிமுகமாகி டேட்டிங் செய்திருக்கிறார். இருவரும் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். சில நாட்களுக்கு பிறகு 2 பேரும் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு பழகி உள்ளார்கள். அந்த இளம்பெண், பெங்களூருவில் அழகு நிலையம் நடத்தி வருவதாகவும், இந்த தொழில் மட்டும் இன்றி ஆன்லைன் வர்த்தகம் மூலமும் லாபம் ஈட்டி வருவதாகவும் கூறியிருக்கிறார்.
இளம் பெண் பேச்சில் மயங்கினார்
அவரிடம் ஆன்லைனில் முதலீடு செய்யுமாறு அரசு அதிகாரியிடம் ஆசைவார்த்தை கூறினார். மேலும் ஆன்லைனில் வர்த்தகம் மேற்கொள்வதற்கு இணையதள முகவரிகளை இளம்பெண் அனுப்பி உள்ளார். இளம்பெண்ணின் பேச்சில் மயங்கிய அரசு அதிகாரி, குறிப்பிட்ட இணையதள முகவரியில் சென்று முதல் கட்டமாக ரூ.43 ஆயிரம் முதலீடு செய்தார். அப்போது அவருக்கு முதலீடு செய்ததை விட கூடுதலாக பணம் கிடைத்துள்ளது.
20 லட்சம் காலி
இதனால் நம்பிக்கை அடைந்த அரசு அதிகாரி, இளம்பெண் தூண்டுதலின் பேரில் பலமுறை ஆன்லைன் மூலம் மொத்தம் ரூ.20 லட்சம் முதலீடு செய்தார். ஆனால், அரசு அதிகாரிக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை. பணத்தை பெற பல வழிகளில் முயற்சி செய்தும், அவரால் முடியவில்லை. அந்த இளம்பெண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர், இதுகுறித்து ஆன்லைன் மூலம் நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து நீலகிரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அதிகாரியிடம் இளம் பெண் ஒருவர் 20 லட்சம் ஏமாற்றிய சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்














Click it and Unblock the Notifications