ஊட்டிக்கு ஹனிமூன் போன இளம் பெண்.. லாட்ஜ் குளியலறையில் பார்த்தால்.. அரண்டு போய்.. திடுக் தகவல்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மசினகுடியில், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் குளியலறைக்கு போன இளம்பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த லாட்ஜ் ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, மசினக்குடி, முதுமலை, குன்னூர், கொடநாடு, கோத்தகிரி என எல்லா இடங்களுமே சுற்றுலா தளங்கள் ஆகும். ஆண்டு முழுவதுமே குளுகுளுவென இருக்கும். இதனால் ஆண்டு முழுவதுமே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சுற்றுலா பயணிகள் மிக அதிக அளவில் வருவார்கள்.

தமிழ்நாடு முழுவதிலிருந்தும், பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு சுற்றுலா வந்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் இருக்கின்றன.
சுற்றுலா வருவோருக்கு சுகமான அனுபவங்களே இருக்கின்றன. ஒரு சிலருக்கு கசப்பான அனுபவங்களும் நடக்கின்றன. அப்படித்தான் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிக்கு நடந்துள்ளது.புதுமணத்தம்பதிக்கு நடந்த சம்பவம் ஒன்றை கேட்டால் ஷாக்காகிவிடுவீர்கள்.
இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 25 வயதான இளம் தம்பதி வியாழக்கிழமை அன்று நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்த தம்பதியினர் மசினகுடி அடுத்த ஆச்சக்கரை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார்கள்.
இதில் கணவருடன் வந்த இளம்பெண், கழிப்பறையுடன் கூடிய குளியலறைக்கு சென்றிருக்கிறார். அப்போது குளியலறை ஜன்னலின் மறைவான பகுதியில் இளைஞர் நின்றுள்ளார். அவர் திடீரென இளம்பெண்ணை செல்போனால் வீடியோ எடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் உடனே சத்தம் போட்டார்.
இதையடுத்து இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த இளம்பெண்ணின் கணவரும், விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளும் இளைஞரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்தனர்.
அவர் பெயர் ஷிண்டு (வயது 23) என்பதும் மசினக்குடியைச் சேந்தவர் என்பதும், தனது செல்போனால் குளியலறையில் இருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்ததும், இதே தனியார் விடுதியில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குளியலறையில் இளம்பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த ஷிண்டுவை, மசினகுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications