ஏட்டையாவுக்கு தெரிந்தது கூட அண்ணாமலைக்கு தெரியல.. இவர் எப்டி எஸ்பியா இருந்தாரோ? -அமைச்சர் ஆவடி நாசர்
நீலகிரி: சாதாரண ஏட்டையாவிற்கு இருக்கும் காம்மன்சென்ஸ் கூட அண்ணாமலைக்கு இல்லை எனவும் இந்திய அளவில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து அரசியல் செய்தது திமுக ஒருபோதும் இழக்காது என பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் பேசியுள்ளார்.
Recommended Video
உதகையில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் ஆவின் பால்பண்ணை உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள ஆவின் பால் பண்ணைகளில் நெய், வெண்ணை, உற்பத்தி செய்யப்படும் இடங்களையும் ஆய்வு செய்து அவற்றின் தரம் குறித்து அமைச்சர் பார்வையிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் ஆவின் ஹெல்த் மிக்ஸ் பொருட்கள் தரமில்லாமல் இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவரும் அண்ணாமலை மீது வழக்கு தொடர உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் கோவையில் கூறிய நிலையில் அது குறித்து செய்தியாளர்கள் மீண்டும் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஆவடி நாசர், "சாதாரண ஏட்டையாவிற்கு இருக்கும் பொதுஅறிவு கூட ஐபிஎஸ். அண்ணாமலைக்கு இல்லை. அதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. இவரெல்லாம் எப்படி எஸ்பியாக இருந்தாரோ? ஜவஹர்லால் நேரு, எட்டு மணிநேரத்தில் வங்கதேசை பிரித்துக் கொடுத்த இந்திரா காந்தி, எம்ஜிஆர், இரும்பு பெண் ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து அரசியல் செய்தது திமுக. இந்திய ஒருமைப்பாட்டிற்காக எதை வேண்டுமானாலும் இழப்போம், ஆனால் சுயமரியாதையை ஒரு போதும் இழக்க மாட்டோம்." என்றார்.
-
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக












Click it and Unblock the Notifications