ஊட்டி அரசு கல்லூரியில் ‘பிரீ பையர்’ கேம்.. இறுதியில் எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பாருங்க
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் மாணவ-மாணவிகள் 4 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் தமிழ் துறை 2-ம் ஆண்டு படித்து வந்த 2 மாணவர் குழுக்கள் 'பிரீ பையர்' எனப்படும் ஆன்லைன் விளையாட்டை விளையாடி உள்ளனர். இதில் அவர்ககளுகுள் ஏற்பட்ட சண்டை எங்கே கொண்டுபோய் நிறுத்தியது தெரியுமா? 10 பேருடன் ஒரு குரூப்பும், மறுநாள், எதிர் தரப்பு ஆதராக ஒரு நபர் அரிவாளுடன் வந்துள்ளார். இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி காலங்களில் ஏற்படும் மோதல், உப்பு சப்பு இல்லாத காரணங்களுக்காகவே பல நேரங்களில் நடக்கிறது. அந்த பெண்ணை சைட் அடிப்பது யார், யார் கெத்தாக இருப்பது, ராகிங் செய்வது, யார் தல என்பது போல் சண்டை என ஒன்றுக்கும் உதவாத சண்டையாகவே இருக்கும். அதேபோல் அழகான பெண்ணை காதலிப்பது யார் என்பதிலும் சில நேரங்களில் சண்டை வருவது உண்டு. சிலர் போதைப்பழக்கங்கள் காரணமாகவும் சண்டை போடுவது உண்டு. ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் 'பிரீ பையர்' விளையாட்டு காரணமாக சண்டை வந்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் மாணவ-மாணவிகள் 4 ஆயிரம் பேர் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் தமிழ் துறை 2-ம் ஆண்டு படித்து வந்த 2 மாணவர் குழுக்கள் 'பிரி பையர்' எனப்படும் ஆன்லைன் விளையாட்டை விளையாடியிருக்கிறார்கள். ஆன்லைன் கேமில் தாக்குவது, துப்பாக்கியால் தொடர்ந்து சுடுவது என குழுவாக கேம் விளையாடி உள்ளனர். அப்போது தகாத வார்த்தை பேசியதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இது சண்டையாக மாறியது.
இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவருக்கு ஆதரவாக காந்தல் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் நேற்று 10 நபர்களுடன் கல்லூரிக்கு வந்து, மதுரை மாவட்டத்தை சேர்ந்த 2-ம் ஆண்டு படிக்கும் மாணவரிடம் தகராறு செய்தார்களாம். இதனால் பயந்து போன அந்த மாணவர், ஊட்டியில் உள்ள பெயிண்டரான தனது சகோதரருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெயிண்டர் அரிவாளுடன் கல்லூரி நுழைவுவாயில் முன்பு வந்து உள்ளார். இதை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து ஊட்டி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் சாம் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி, அருகில் இருந்த போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தகவல் அறிந்த ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அரிவாளுடன் அங்கு வந்த நபர், போலீசாரை பார்த்ததும் தப்பியோடி விட்டார். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications