பாஜகவை "டோட்டலா" காலி செய்துட்டாரு.. அதிமுகவும் முழிக்குது! நீலகிரியில் ஆ.ராசா நடத்திய "புதிய சாதனை"

15 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.. மக்களவைக்கு 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. திமுகவின் உயர்நிலைசெயல்திட்டக்குழுவில் உறுப்பினராக இருப்பவர்.. திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளராகவும் அலங்கரிப்பவர். அனைத்தையும்விட முக்கியமாக மறைந்த முதல்வர் கருணாநிதியின் ஆதரவையும், அபிமானத்தையும் அதிகமாகவே பெற்றவர்.
நீலகிரி: இந்த முறையும் நீலகிரி தொகுதியே ஆ.ராசாவுக்கு ஒதுக்கப்பட்டது.. அதிமுக,பாஜக இரண்டு கட்சிகளுமே தனித்தனியாக களம் கண்டது, ஆ.ராசாவுக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாகிவிட்டது.
பாஜக வேட்பாளர் எல்.முருகன், நீலகிரியில் போட்டியிட கடந்த 2 வருடமாகவே ஆசைப்பட்டு வருவது தெரிந்தும், தன்மீதான வெற்றியில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார் ஆ.ராசா. அதுமட்டுமல்ல, பாஜக, அதிமுக வேட்பாளர்களைவிட, ஆ.ராசா சீனியர் ஆவார்.. கள அனுபவங்களை பலமுறை நேரடியாக பெற்றவரும் ஆவார்.. இதெல்லாம் கூடுதல் சாதகமாக அவருக்கு அமைந்துவிட்டது.
போட்டி: அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்.ஜெயகுமார் உட்பட 16 பேர் வேட்பாளர்கள் களமிறங்கினார்கள்.. ஆனால், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 2 லட்சத்து 40 ஆயிரத்து 585 வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா வெற்றி பெற்றிருக்கிறார்.. அதாவது, மொத்தம் பதிவாகிய 10 லட்சத்து 16 ஆயிரத்து 318 வாக்குகளில் 46.45 சதவீத வாக்குகளை ஆ.ராசா பெற்றிருக்கிறார்.
சபாஷ்: அந்தவகையில், கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு வித்தியாசமான 2 லட்சத்து 5 ஆயிரம் வாக்குகளை கடந்துள்ளதுடன், 2 லட்சத்து 40 ஆயிரத்து 585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.. நீலகிரி தொகுதி வரலாற்றில் இதுவே அதிகபட்ச வாக்கு வித்தியாசமாகும். அந்தவகையில், மீண்டும் டெல்லி செல்கிறார் திமுகவின் ஆ.ராசா












Click it and Unblock the Notifications