கண்ணே தெரியல.. ஊரெல்லாம் ஒரே பனி.. ரோடெல்லாம் உருகுதே.. மருகுதே.. உறைய வைக்கும் குளிர்.. ஜில் ஊட்டி!
உறைபனியில் ஊட்டி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்
நீலகிரி : ஊட்டி முழுக்க பனிப்படர்ந்து காணப்படுகிறது.. குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரிசெல்சியசாக இருப்பதுடன், ஊட்டியில் உறைபனி தாக்கத்தால் கடுங்குளிர் நிலவுகிறது... இதனால் எந்நேரமும் பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் குளிர் சீசன் நிலவி வருகிறது.. வழக்கமாக நவம்பர் மாதத்திலேயே ஊட்டியில் உறைபனி தாக்கம் சூழ்ந்துவிடும்.. கடுங்குளிரும் நிலவி விடும்.. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாகவே குளிரில் ஊட்டி நடுங்கி கொண்டிருக்கிறது.

தற்போது குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரிசெல்சியசாக இருக்கிறது.. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மைனஸ் 2, வரை சென்றது.. உறைபனி தாக்கம் தாங்க முடியாமல், பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.
தோட்ட தொழிலாளர்களும், கூலி தொழிலாளர்களும் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தும் வருகின்றனர்.. அதேபோல, இந்த 3 நாட்களாக ஊட்டியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகி உள்ளது.. விடுமுறை என்பதால், பெரும்பாலானோர் வாட்டும் குளிரையும் பொருட்படுத்தாது படையெடுத்து வருகின்றனர்.. ஆனால், அவர்களும், கம்பளி ஆடைகள், ஸ்வெட்டர், தொப்பிகளுடன்தான் இயற்கையை கண்டு ரசிக்கின்றனர்...

வழக்கமாக, ஊட்டி உறைபனிக்கு புல்வெளிகள் உட்பட தாவரங்கள் கருகிவிடும்.. சாம்பல் நிறத்தில் பூத்து காணப்படும்.. ஊட்டி தாவரவியல் பூங்காவில் புல்வெளிகள் அப்படி கருகிவிடாமல் இருக்க தினமும் காலை மற்றும் மாலையில் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.. எனினும், உறைபனி தாக்கம் ஜனவரி முடியும்வரை இருக்கும் என்பதால், தேயிலை செடிகள் கருகும் அபாயம் ஏற்படும் என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மாலை நேரங்களில் வழக்கத்துக்கு மாறாக குளிர் அதிகமாக இருக்கிறது... இதனால் டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் லாரிகள், வண்டிகள் எதுவுமே காலை நேரங்களில் இயக்க முடிவது இல்லை... என்ஜின் மீது கொதிக்கும் சுடுதண்ணீரை ஊற்றிய பிறகுதான், இயக்கப்படுகிறது... அதேபோல காலை நேரங்களில் பனி அதிகமாக காணப்படுவதால், சாலையில் கண்ணே தெரிவதில்லை.. இதனால் அதுபோன்ற நேரங்களில் படுஜாக்கிரதையாகவே வண்டிகளை ஓட்டி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications