என்ன இது இப்படி கிளம்பிருச்சு.. எச்எம்முக்கு ஆதரவாக போராடிய பெற்றோர்களை விரட்டி கொட்டிய தேனீக்கள்!
குன்னூர்: பள்ளி ஹெச்.எம்.மை டிரான்ஸ்பர் செய்யக்கூடாது என்று முறையிட வந்த பெற்றோரை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டிய சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில நாள்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறையும் உத்தரவிட்டிருந்தது.
இதனால் குன்னூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இப்போது வேறு வேறு பள்ளிகளில் வேலை பார்த்து வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டம்
இந்நிலையில் குன்னூர் அருகே ஜெ.கொலகம்பை நடுநிலை பள்ளியில் தலைமையாசிரியர் சுமதி மற்றும் துணை தலைமை ஆசிரியர் தர்மராஜ் இருவரையும் டிரான்ஸ்பர் மாற்றப்பட்டதை கண்டித்து, மாணவ, மாணவிகள் ஸ்கூல் முன்பே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெற்றோர்களும் சேர்ந்து போராடினர்.

பள்ளி வளாகம்
தொடர்ந்து அவர்களின் பணி மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் குன்னூர் மாவட்ட. கல்வி அதிகாரியிடம் மனு கொடுக்க சென்றனர். ஆனால் மனுவை பெற்று கொள்ள அதிகாரிகள் அங்கு யாருமே இல்லை. எனவே அதிகாரிகள் வரும்வரை அருகில் உள்ள குன்னூர் அறிஞர் அண்ணா பள்ளி வளாகத்தில் நின்று கொண்டு இருந்தனர்.

சிதறி ஓடினர்
அப்போது எதிர் பாராமல் எங்கோ இருந்து ஏராளமான தேனீக்கள் படையெடுத்து வந்தன. அங்கு இருந்தவர்கள் அனைவரையும் சரமாரியாக கொட்ட தொடங்கியது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பொதுமக்கள் அங்கும் இங்கும் தலைதெறிக்க ஓடினர்.

போராட்டம் தொடரும்
இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அனைவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. டிரான்ஸ்வரை ரத்து செய்யாவிட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று ஆஸ்பத்திரியில் இருந்து காயமடைந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications