பெண் போலீஸ் பாலியல் புகார்.. நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்பி சஸ்பெண்ட்
ஊட்டி: பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்பி சஸ்பெண்ட் சார்லஸ் செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்ட மது விலக்கு பிரிவு கூடுதல் எஸ்பியாக பணியாற்றி வருபவர் சார்லஸ். இவர் ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் பணியாற்றிய போது, பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் ஒருவர், தமிழக அரசு தலைமை செயலகத்தில் அண்மையில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கூடுதல் எஸ்பி சார்லஸ், பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட மது விலக்கு பிரிவு கூடுதல் எஸ்பி சார்லசை, கோவை டிஐஜி அலுவலகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.. மேலும், இவர் விசாரணை காலம் முடியும் வரை நீலகிரி மாவட்டம் தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications