ரூபிணியின் மறுரூபம்.. வலையில் விழ வைத்த மோசடி.. ஊட்டி போலீஸ் அதிரடி.. இப்போ ஜெயிலில் 1,2,3..!
மோசடி புகாரில் பொள்ளாச்சி பெண் கைது செய்யப்பட்டார்
ஊட்டி: ரூபிணிக்கு ரொம்பவே பணத்தாசை.. அப்பாவி மக்களை ஏமாற்றி கடன் தருவதாக சொல்லி.. லட்சக்கணக்கில் வாரி சுருட்டி உள்ளார்... இப்போது கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
திடீரென ஊட்டி எஸ்பி ஆபீசில் ஒரு கும்பல் திரண்டு வந்தது.. ஆக்ரோஷமாகவும், ஆவேசமாகவும் காணப்பட்ட அவர்கள், கையில் ஒரு மனு கொண்டு வந்திருந்தனர்.
அதில், "கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட சிலர், டிரஸ்ட் நடத்துவதாக எங்களிடம் சொல்லி, வீடுகள் கட்டுவதற்கும், கல்யாணம் நடத்துவதற்கும் கடன் தருகிறோம்... முன் பணம் மட்டும் தந்தால் போதும், கடன் தருகிறோம் என்றார்.

முன்பணம்
ஆனால் நீண்ட நாட்களாகியும், கடன் வழங்கவில்லை.. கொடுத்த முன் பணத்தையும் திருப்பி தரவில்லை.. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தாங்கள் கொடுத்த முன் பணத்தை திருப்பி பெற்றுத்தர வேண்டும்" என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதையடுத்து இதன்பேரில் உடனடி விசாரணை ஆரம்பமானது..

பொள்ளாச்சி
அப்போதுதான் ரூபிணியின் பல ரூபங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.. பொள்ளாச்சி வடக்கிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்தான் ரூபிணி பிரியா.. 29 வயது ஆகிறது.. "வீடு கட்ட கடன் தருகிறோம், அதற்கு முன்பணமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை தந்தால் போதும்" என்றுதான் பேச்சையே ஆரம்பிப்பாராம்.. இதை நம்பி பலரும் பணத்தை கொண்டுபோய் கட்டி உள்ளனர். தான் டிரஸ்ட் வைத்திருப்பதாக சொல்லி தான் இவர் மக்களை நெருங்கி உள்ளார்.. ஆனால் அது போலியான டிரஸ்ட் என்பது தெரியவந்துள்ளது..

நம்பினர்
பொள்ளாச்சியில் ஆரம்பித்த மோசடி ஊட்டி மக்கள் வரை வந்துள்ளது.. பல பேர் ரூபிணி பேச்சில் நம்பி விழுந்துள்ளனர்.. இதற்காக சிவா, கார்த்திக், வெங்கடேஷ் ஆகியோரை ஏஜென்ட்டுகளாக ரூபிணி நியமித்துள்ளார் மொத்தம் 65 பேரிடம் பணமோசடி செய்துள்ளார்.. 18 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பணத்தை ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு தகவலையும் திரட்டிய குற்றப்பிரிவு போலீசார் ரூபினி பிரியாவை பொள்ளாச்சியில் சென்று கைது செய்தனர். உடனிருந்த ஏஜென்ட்டுகளையும் போலீசார் தேடி வருகிறார்கள்..

கைது
இந்த ரூபிணி & கோ, வேறு பல இடங்களிலும் போலியான டிரஸ்ட் வைத்து மக்களை ஏமாற்றி உள்ளதாகவும் சொல்கிறார்கள். ரூபிணி கைது என்ற விஷயத்தை கேள்விப்பட்டதுமே பாதிக்கப்பட்ட மக்கள் ஊட்டி எஸ்பி ஆபீசுக்கு விரைந்து வந்தனர்.. ஆனால், கோர்ட் உதவியை நாடுமாறு போலீசார் அவர்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ரூபிணி.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்!
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications