உயிரோடு மண்ணில் புதைந்த சோகம்.. நீலகிரியில் கிணறு தோண்டும் போது 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மண் சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கிணறு வெட்டும் பணியின் போது மண் சரிந்து மண்ணுக்குள் புகுந்த நிலையில் அவர்கள் 3 பேரது உடல்களும் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்து. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில் உயிரிழந்த தொழிலாளர்கள் 3 பேரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா கிராமத்தில் கிணறு வெட்டும் பணி நடந்து வந்தது. இதற்கான கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலரும் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென அங்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் 3 வட மாநில தொழிலாளர்கள் மண்ணுக்குள் அப்படியே புதைந்து போயினர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போலீசார் மற்றும் அப்பகுதியினர் உதவியுடன் 3 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் அங்கிருந்து உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வந்த நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். விசாரணையில் உயிரிழந்த தொழிலாளர்கள் 3 பேரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கிணறு வெட்டும் பணியின் போது மண்ணுக்குள் புதைந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications