உயிரோடு மண்ணில் புதைந்த சோகம்.. நீலகிரியில் கிணறு தோண்டும் போது 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மண் சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கிணறு வெட்டும் பணியின் போது மண் சரிந்து மண்ணுக்குள் புகுந்த நிலையில் அவர்கள் 3 பேரது உடல்களும் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்து. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில் உயிரிழந்த தொழிலாளர்கள் 3 பேரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா கிராமத்தில் கிணறு வெட்டும் பணி நடந்து வந்தது. இதற்கான கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலரும் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென அங்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் 3 வட மாநில தொழிலாளர்கள் மண்ணுக்குள் அப்படியே புதைந்து போயினர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போலீசார் மற்றும் அப்பகுதியினர் உதவியுடன் 3 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் அங்கிருந்து உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வந்த நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். விசாரணையில் உயிரிழந்த தொழிலாளர்கள் 3 பேரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கிணறு வெட்டும் பணியின் போது மண்ணுக்குள் புதைந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications