ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. காயமா? மூச்சுதிணறலா? குழப்பும் கொடநாடு கொலையின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
கொடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
ஊட்டி: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.. இதையடுத்து இந்த வழக்கு மேலும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
கொடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில், கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு கொலை நடந்தது.. கொள்ளையும் நடந்தது..
இது தொடர்பான வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான், போலீசாரிடம் நிறைய வாக்குமூலங்களை அளித்தார்.. அந்த ரகசிய வாக்குமூலங்களை போலீசாரும் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

விசாரணை
அதேபோல, சாலை விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணனையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்... அவரிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர்.. இந்த நிலையில், காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டதில் போலீசார் அளித்துள்ள அறிக்கைக்கும், மருத்துவ குழுவினர் அளித்துள்ள போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்கும் இடையே முரண்பட்ட தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

எப்ஐஆர்
போலீசாரின் எப்ஐஆரில், ஓம்பகதூர் உடலில் 7 இடங்களில் வெட்டு காயம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.. ஆனால், மருத்துவ குழுவினர் அளித்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் ஓம்பகதூர் உடலில் ரத்த காயங்களே எதுவும் இல்லையாம்.. அவர் மூச்சுத்திணறியே உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளதாம்.. அதுமட்டுமல்ல, கொலை நடந்த நேரம் இரவு 12 மணி என்று ஒரு வாக்குமூலமும், 3 மணி என்று இன்னொரு வாக்குமூலமும் சொல்கிறது.

திருப்பம்
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் காவலாளி எப்போது இறந்தார் என்று நேரம் குறிப்பிடப்படவில்லையாம்.. இதுபோன்ற நிறைய முரண்பட்ட தகவல்கள் இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை தந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமீனில் உள்ள தீபு, ஜித்தின் ஜாய் ஆகியோர் தரப்பு வக்கீல்களில் ஒருவரான வக்கீல் விஜயன் தந்த பேட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
அதில், "கொடநாடு வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன.. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உட்பட 9 பேரிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது... இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இதற்கான எண்ணை வழங்கி பட்டியலிலும் சேர்த்துள்ளது... இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனுவை ஏற்றுக் கொண்டு இவர்களை விசாரிக்க அனுமதியளித்தால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உட்பட 9 பேரிடம் விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளது" என்றார்... இது அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை கூட்டி வருகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications