ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 9 படகுகள் திடீர் மாயம்- இலங்கை அதிகாரிகள் அதிர்ச்சி
மன்னார்: ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 9 படகுகள் திடீரென மாயமானதால் இலங்கை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக இலங்கையில் இருந்து வெளியாகும் காலைக்கதிர் ஏடு வெளியிட்டுள்ள செய்தி: 2014ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு காலத்தில் தமிழக மீனவர்களின் 9 படகுகள் மன்னாரிலும், 6 படகுகள் தலைமன்னர் கடற்படைத்தளத்திலும் தரித்து நிறுத்தப்பட்டிருக்கின்றன என அறிக்கையிடப்பட்டது.

இவ்வாறு நிற்கும் படகுகளில் மன்னார் மாவட்டத்தில் 9 படகு ஏலம் விடப்படும் எனவும் பத்திரிகையில் பகிரங்க விளம்பரம் பிரசுரிக்கப்பட்டது. இதற்கமைய நேற்றைய தினம் படகுகளை ஏலம் விடுவதற்காக நீரியல்வளத் திணைக்களம் மற்றும் அமைச்சுகளின் அதிகாரிகள் குழு மன்னார் முழுவதும் தேடியபோதும் அங்கே ஒரு படகு கூட அப்படிக் காணப்படவில்லை.
இதன் போது செய்தியாளர்களும் பிரசன்னமாகியிருந்தமையால் அதிகாரிகள் வாயடைத்து நின்றனர். இதனால் கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகள், திணைக்கள உத்தியோகத்தர் இடையே கடும் வாக்குவாதம் இடம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
தலைமன்னார், பியர் இறங்குதுறையில் நேற்று மதியம் இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலை யில், ஏல விற்பனையில் கலந்து கொண்டு படகுகளைக் கொள்வனவு செய்ய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் தலை மன்னார் -பியர் இறங்குதுறைப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.
எனினும், அறிவிக்கப்பட்டது போன்று ஏல விற்பனை இடம்பெறவில்லை என வருகை தந்த கொள்வனவாளர்கள் தெரிவித்தனர். நேற்று காலை முதல் மதியம் வரை ஏல விற்பனைக்காகக் காத்திருந்தபோதும் இறுதி நேரத்திலேயே குறித்த ஏலவிற்பனை இடம்பெறாது என ஏற் பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தூர இடங்களில் இருந்து வருகை தந்த கொள்வனவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இவ்வாறு காலைக்கதிர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications