பற்றி எரிந்த ஈபிள் டவர்.. மளமளவென பரவிய தீ.. ஷாக் சம்பவம்.. சென்டிமென்ட்டாக சரியில்லையே
பாரிஸ்: இந்திய நேரப்படி நேற்று இரவு பாரிஸில் உள்ள ஈபிள் டவரின் முதல் மற்றும் இரண்டாவது தளங்கள் தீ பிடித்தன. சரியாக 2025ம் வருடம் தொடங்கும் நேரத்தில் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டு இருப்பது மிகப்பெரிய கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.
ஈபிள் டவரின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் உள்ள லிஃப்ட் கம்பிகளில் ஒன்றில் தீப்பிடித்ததால்.. அந்த டவர் முழுக்க தீ பரவியது. மொத்த டவரும் பற்றி எரியும் காட்சிகள் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அங்கே தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து 1,200 சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். லிப்ட் ஷாஃப்டில் அதிக வெப்பம் ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கே உள்ள கேபிள் முதலில் வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டது. அந்த கேபிள் முதலில் தீ பிடித்தது. அது அப்படியே பரவி மொத்தமாக டவர் முழுக்க தீ விபத்து ஏற்பட்டது. ஷார்ட் சர்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மொத்த கோபுரமும் இதனால் தீயால் படர்ந்தது. இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
சம்பவத்தை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். ஆனால் 4-5 மணி நேரங்கள் கழித்தே தீ அணைக்கப்பட்டது. ஈபிள் கோபுரம் தினமும் சுமார் 25,000 பார்வையாளர்களை ஈர்க்கிறது. உலக அதிசயங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. சரியாக 2025ம் வருடம் தொடங்கும் நேரத்தில் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டு இருப்பது மிகப்பெரிய கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.
இந்த சமீபத்திய தீ விபத்து சம்பவம் ஈபிள் டவரின் டிவி கட்டுப்பாட்டு அறையில் 1956 இல் ஏற்பட்ட தீவிபத்தை போலவே இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். 1956ல் ஏற்பட்ட தீ விபத்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது ஈபிள் டவரை பழுதுபார்க்க ஒரு வருடம் தேவைப்பட்டது.
அதன்பின் 2 முறை இதேபோல் ஈபிள் கோபுரத்தில் பெரிய தீ விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. மொத்த டவரும் பற்றி எரியும் காட்சிகள் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இணையத்தில் இதன் காட்சிகள் டிரெண்டாகி வருகின்றன.
இந்த சம்பவத்தால் பார்வையாளர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் கோபுரம் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும், ஆனால் இரண்டாவது மாடிக்கு மேல் மக்கள் செல்ல அனுமதி இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீ விபத்து குறித்து கருத்து தெரிவிக்க பாரீஸ் போலீசார் மறுத்துவிட்டனர்.
1889ல் இந்த டவர் திறக்கப்பட்டது. இது பிரான்சின் கலாச்சார சின்னமாகவும், உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது. இந்த ஈபிள் கோபுரம் 2022 இல் 5,889,000 பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. உலகிலேயே ஈபிள் கோபுரம் நுழைவுக் கட்டணத்துடன் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவுச்சின்னமாகும்: 6.91 மில்லியன் மக்கள் 2015ல் இதை பார்வையிட்டனர். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக இந்த டவர் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications