பிரான்சிலிருந்து இந்தியா கிளம்பியாச்சு 5 ரஃபேல் போர் விமானங்கள்.. அமீரகத்தில் மட்டும் ஒரு ஸ்டாப்
பாரீஸ்: இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள 5 ரஃபேல் ஜெட் போர் விமானங்கள், இன்று பிரான்சிலிருந்து கிளம்புகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் மட்டும் அது நின்று பிறகு இந்தியாவிற்கு வரும் 29ம் தேதி வந்து சேரும்.
Recommended Video
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனத்துடன், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ. 59,000 கோடியாகும். ஒவ்வொரு ஆண்டும் 12 விமானங்கள் என்ற வீதம் அனுப்பி வைக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் சாராம்சம்.

தீவிர பயிற்சி
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை 9 ரஃபேல் விமானங்களை இந்திய விமானப்படையிடம் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஒப்படைத்துள்ளது. ஆனால் இதுவரை அவை இந்தியா வரவில்லை. இந்திய விமானப்படை விமானிகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பிரான்ஸ் சென்று அங்கிருந்து, பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆயுத பூஜை
இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி, பிரான்ஸ் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேல் விமானங்களை பெற்றுக் கொண்டு, அவற்றுக்கு ஆயுத பூஜை செய்துவிட்டு வந்தார். நான்கு விமானங்கள் மே மாதம் இந்தியா வந்திருக்கவேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக அது வரவில்லை. ரஃபேல் போர் விமானம், இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டால், இந்த பிராந்தியத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத, அதிநவீன விமானமாக, அது விளங்கும்.

எரிபொருள்
ரஃபேல் விமானம் பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு ஏறக்குறைய 7,000 கி.மீ தூரத்தை கடந்து வர வேண்டும். எனவே, வழியில், எரிபொருள் நிரப்ப வேறு நாடுகளில் தரையிறங்க தேவையிருந்தது. ஆனால் விமானிகளை தனிமைப்படுத்தும் விதிமுறை அந்த நாடுகளில் இருப்பதால், எரிபொருளை வானிலேயே நிரப்பும் ஏற்பாடுகளுடன், இந்த விமானங்கள் கிளம்புகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டும், ரபேல் நின்று பிறகு இந்தியா வரும்.

அதி நவீன வசதிகள்
ரபேல் போர் விமானங்கள் அதிநவீன வசதி கொண்டவை. இஸ்ரேலிய தயாரிப்பு அம்சமான, ஹெல்மெட் மீது டிஸ்ப்ளே, ரேடார் எச்சரிக்கை ரிசிவர்கள், லோ பேண்ட் ஜாமர்கள், 10 மணி நேர டேட்டா ரெக்கார்டிங், இன்ப்ரா ரெட் சர்ச்சிங், டிராக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த விமானத்தில் உள்ளன.
|
பலம்
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த மாதம், பிரெஞ்சு நாட்டு பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரபேல் விமானங்களை விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இந்தியா வரும் ரபேல் விமானங்கள், ஹரியானாவிலுள்ள அம்பாலா விமானப் படை தளத்தில் சேர்க்கப்படும். ஒரு பக்கம் சீனா எல்லையில் தொல்லை கொடுக்கும் நிலையில், ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications