இந்தியா ராஜதந்திரம்! பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி நிகழ்வுக்கு தடை
பாரிஸ்: தொடர்ச்சியான ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி மசூத் கான் பங்கேற்பதை இந்தியா தடுத்து நிறுத்தி உள்ளது.
பாரிஸில் உள்ள இந்திய அதிகாரிகள். பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகத்தில் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.
பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் செப்டம்பர் 24ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி மசூத் கான் அழைக்கப்பட்டார்.

பலரும் புகாரால் தடை
இதற்கு இந்திய அதிகாரிகள் மற்றும் இந்தியாவில் இருந்து பிரான்ஸில் குடிபெயர்ந்தோர் பலர் அந்நாடடு வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு எதிர்ப்பு தெரித்து மெயில் அனுப்பினர். இது இந்தியாவின் இறையாண்மையை மீறும் செயல் என புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஜனாதிபதி மசூத் கானை நிகழ்ச்சியில் பங்கேற்க பிரான்ஸ் அரசு தடை செய்தது.

பிரான்ஸில் எடுபடவில்லை
இதையடுத்து கான் சார்பாக பாகிஸ்தான் தூதர் மொயின்-உல் ஹக் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்வு பிரான்ஸ் மக்களிடையே கவனம் ஈர்க்கவில்லை. இதில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் தான். இதன் மூலம் காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் கதை பிரான்ஸில் எடுபடவில்லை.

கான் உடனான தேநீர் விருந்து
முன்னதாக நெருக்கடி காரணமாக செப்டம்பர் 23ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி மசூத் கானுடனான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியையும் பாகிஸ்தான் தூதர் மொயின்-உல் ஹக் ரத்து செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்தியஸ்தம் தேவையில்லை
காஷ்மீர் விவகாரம் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு விஷயம் என்றும் இதில் சர்வதேச மத்தியஸ்தம் தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலும் பிரான்ஸ் உறுதியாக உள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி பாரிஸ் அருகே பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு அளித்தது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications