ரயில் தண்டவாளத்தில் கிடந்த மர்ம பொருள்.. கிட்ட போய் பார்த்தவர்களுக்கு ஷாக்! பிரான்ஸில் சலசலப்பு
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் முக்கிய வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த குண்டு இரண்டாம் உலகப் போர் காலத்தை சேர்ந்தது என்றும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பாரிஸ் கார் து நோர்ட் (Gare du Nord) ரயில் நிலையத்தில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதுபோன்று வெடிகுண்டுகள் பிரான்ஸில் கண்டுபிடிக்கப்படுவது இது முதல்முறை கிடையாது. இருப்பினும், இந்த குண்டு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் பல இன்னமும் வெடிக்காமல் பல இடங்களில் அப்படியே புதைந்து இருக்கிறது. பிரான்ஸ் நாட்டிலும் இப்படி சில இடங்கள் இருக்கின்றன. வெடிக்காத குண்டுகளை தேடி, அதை செயலிழக்க செய்ய தனி குழுவே செயல்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், நேற்று பாரிஸ் கார் து நோர்ட் (Gare du Nord) ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள தண்டவாளத்தில் ரயில்வே ஊழியர்கள் வேலை செய்து வந்திருக்கிறார்கள்.
அப்போது வழக்கத்திற்கு மாறான, வித்தியாசமான பொருளை பார்த்திருக்கிறார்கள். தண்டவாளத்தில் இரும்பு கிளிப்புகள்தான் அதிகம் இருக்கும். ஆனால் இந்த பொருள் இரும்பு கிளிப்பை போன்று கிடையாது. அப்படி இருக்கையில் என்னதான் அது? என்று தோண்டி பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் அது ஒரு வெடி குண்டு என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ், அது இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டு என்பதை உறுதி செய்திருக்கின்றனர்.
இந்த குண்டு வெடித்திருந்தால் 100-200 மீ சுற்றளவில் வெறும் சாம்பல்தான் மிஞ்சி இருந்திருக்கும். யோசித்து பாருங்கள் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கும் ரயில் மீது இந்த குண்டு வெடித்தால் என்ன ஆகும்? நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைவார்கள். கடுமையான பொருளாதார பாதிப்புகளும் ஏற்படும். இந்த சேதாரங்களை அதிகாரிகளும் உறுதி செய்திருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில், குண்டை பத்திரமாக அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "குண்டு கண்டுபிடிக்கப்பட்ட ரயில் நிலையத்தில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. பயணிகள் மாற்று போக்குவரத்தை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். பிரான்ஸில் ஒரு நாளைக்கு சுமார் 7 லட்சம் பேர் ரயில்களை பயன்படுத்துகிறார்கள். குண்டு வெடித்திருந்தால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். நல்வாய்ப்பாக முன்னரே கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு இதேபோல செயிண்ட்-லாசரே (Saint-Lazare) ரயில் நிலையத்திலும் ஒரு வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் இரண்டாம் உலகப்போர் காலத்தை சேர்ந்தது என்பது கவனிக்கத்தக்கது. போர்கள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பதற்கு இப்படியான சம்பவங்களே சாட்சி.












Click it and Unblock the Notifications