ஊசலாடிய உயிர்.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை! 9 மணிநேரத்துக்கு பின் மீட்பு! சிலிர்க்குதே
பாட்னா: பீகாரில் இன்று காலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை 9 மணிநேரத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த நிலையில் தான் குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டது எப்படி? என்பது பற்றிய சிலிர்க்க வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகன் சுபம் குமார் (வயது 3). இந்நிலையில் சிறுவன் வசிக்கும் பகுதியில் விவசாயி ஒருவர் ஆழ்துளை கிணறு தோண்டினார். அந்த கிணற்றில் தண்ணீர் வரவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த விவசாயி மாற்று இடத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். இதற்கிடையே தண்ணீர் கிடைக்காத ஆழ்துளை கிணற்றை விவசாயி மூடவில்லை. திறந்த நிலையிலேய அந்த ஆழ்துளை கிணறு இருந்தது.
இந்நிலையில் இன்று காலையில் சுபம் குமார் மூடப்படாத ஆழ்துளை கிணறு அருகே விளையாடினான். அப்போது எதிர்பாராத விதமாக அவன் அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். இதற்கிடையே சுபம் குமாரை அவரது குடும்பத்தினர் தேடியபோது ஆழ்துளை கிணற்றில் இருந்து அவன் அழும் சத்தம் கேட்டது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
#WATCH | Rescue operation underway to rescue a child who fell into a borewell in Kul village of Nalanda, Bihar.
— ANI (@ANI) July 23, 2023
Police and district administration officials are present on the spot. pic.twitter.com/7kVAmebCWd
மேலும் 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது பற்றி போலீஸ் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தேசிய மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியை தொடங்கினர். அப்போது 30 முதல் 40 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து குழாய் மூலம் சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது. அதோடு சிறுவனின் செயல்பாட்டை கண்காணிக்கும் வகையில் கேமரா ஆழ்துளை கிணற்றுக்குள் அனுப்பப்பட்டது. இந்த கேமரா மூலம் சிறுவனின் அசைவுகள் கண்காணிக்கப்பட்டது. மேலும் ஜேசிபி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஆழ்த்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டது. மண் எதுவும் சரிந்து ஆழ்துளை கிணற்றுக்குள் விழாத வகையில் மிகவும் கவனமாக 9 மணிநேரம் இந்த மீட்பு பணி நடந்தது.
#WATCH | Bihar: The child who fell into a borewell in Kul village in Nalanda has been rescued. More details are awaited. https://t.co/G6FW8RDIJJ pic.twitter.com/KQouMHkffD
— ANI (@ANI) July 23, 2023
இறுதியாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுபம் குமார் இன்று மாலையில் பத்திரமாக மீட்கப்பட்டார். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுபம் குமாரை பரிசோதித்த டாக்டர்கள் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக சுபம் குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications