தேர்தல் பிரசாரத்துக்கு இன்று குட்பை! பீகாரில் அமித்ஷா - ராகுல் கடைசி நாள் வியூகம்.. களமிறங்கிய யோகி
பாட்னா: பீகாரில் முதற்கட்ட தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து 2வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நாளை மறுநாள் (நவம்பர் 11)ம் தேதி 20 மாவட்டங்களில் உள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வர உள்ளது. கடைசி நாளான இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பாஜகவின் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் பொதுக்கூட்டங்களில் பேச உள்ளனர்.
பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பீகாரில் முதற்கட்ட தேர்தல் நவம்பர் 6ம் தேதி 121 சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 65.08 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

2வது கட்டமாக நவம்பர் 11ம் தேதி (நாளை மறுநாள்) 20 மாவட்டங்களில் உள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதன்பிறகு, நவம்பர் 14ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பொதுவாக தேர்தலுக்கு ஒருநாள் இருக்கும்போது பிரசாரம் நிறைவு பெறும். அந்த வகையில் பீகாரில் இன்றுடன் பகிரங்க தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று பாஜக அதன் கூட்டணி கட்சி தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். அதன்படி பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஜா பஜல்கஞ்ச் மைதானம் மற்றும் மதுர்மா மேலோ மைதானம் ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.
அதேபோல் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிசான்கஞ்ச் மற்றும் அமோர் ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார். அதேபோல் பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஆர்ஜேடி கட்சியின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்களும் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
இன்று பிரதமர் மோடி பிரசாரம் செய்யவில்லை. பீகார் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி நேற்றுடன் முடித்து கொண்டார். நேற்றைய தினம் மோடி சன்படியா மற்றும் மற்றும் சிதாமார்ஹி ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசி வாக்கு சேகரித்தார். அப்போது அவர், ‛‛நான் இன்றுடன் பீகாரில் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொள்கிறேன். நவம்பர் 14ம் தேதி பாஜக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு பதவியேற்பு விழாவுக்கு மீண்டும் வருகிறேன்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். மீண்டும் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேபோல், இந்த முறை நிச்சயம் பீகாரில் ஆட்சி மாற்றம் நடக்கும். மக்கள் ‛மகாகத் பந்தன்' கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள் என்று காங்கிரஸ் - ஆர்ஜேடி கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பீகாரை எடுத்து கொண்டால் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பீகாரில் பாஜக கூட்டணி மற்றும் ‛இந்தியா' கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்), முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சியின் எச்ஏஎம் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகள் உள்ளன.
மறுபுறம் எதிர்க்கட்சிகள் ‛மகாகத்பந்தன்' என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடிஎனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் லிபரேஷன் - சிபிஐஎம்எல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிசோரின் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்கள், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
அசிங்க அசிங்கமா பேசுறாங்க..என் கட்சியில எனக்கே பாதுகாப்பு இல்லை! பரபரப்பை பற்ற வைத்த பாஜக கவுன்சிலர் -
அதிமுகவிடம் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்! -
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி












Click it and Unblock the Notifications