பீகார் சட்டசபைத் தேர்தல்... முந்திக்கொண்ட காங்கிரஸ் ஆர்ஜேடி... தொகுதிகள் பங்கீடு முடிந்தது!!
பாட்னா: எதிர்கொண்டிருக்கும் பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஏறக்குறைய தொகுதி பங்கீடுகளை முடித்துக் கொண்டு இருப்பதாக தவகல் வெளியாகியுள்ளது. இதன்படி, ராஷ்டிரிய ஜனதா தளம் 163 தொகுதிகளிலும், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தெரிய வந்துள்ளது.
பீகார் சட்டசபை மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்டது. நடப்பு சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 27 உறுப்பினர்களும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 81 உறுப்பினர்களும் உள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு தற்போது ஒதுக்கப்பட்டு இருக்கும் 163 இடங்களில் விகாஷில் இன்சான் கட்சி, சிபிஐ எம்எல் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுக்கு பகிர்ந்து கொடுக்கும் என்று தெரியவந்துள்ளது. அதேசமயம் இந்துஸ்தான் அவாம் கட்சி, ராஷ்டிரிய லோக் சமட்டா கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி விட்டுக்கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

பீகார் தேர்தல் பொறுப்பாளராக சக்தி கோஹிலை காங்கிரஸ் மேலிடம் நியமனம் செய்துள்ளது. இதுகுறித்து சக்தி கூறுகையில், ''எங்களது கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளன. காங்கிரஸ் 80 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எந்தெந்தத தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இதுகுறித்து காங்கிரஸ் கட்சிசியின் மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர்'' என்று தெரிவித்துள்ளனர்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூறுகையில், ''இடது சாரி கட்சிகளை எங்களது கூட்டணியுடன் இணைத்துக் கொள்வது குறித்து பேசி வருகிறோம். காங்கிரஸ் கட்சியுடன் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளனர்.
தொகுதிப் பங்கீடுகள் குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் செய்தி தொடர்பாளர் மிருத்யுஞ்செய் திவாரி கூறுகையில், ''இப்போதே தொகுதிகள் பங்கீடு குறித்து கூற முடியாது. நாங்கள்தான் இந்தக் கூட்டணியில் பெரிய கட்சியாக இடம் பெற்றுள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தற்போது ஆட்சியில் இருக்கிறது. இந்தக் கட்சியின் சார்பில் நிதிஷ் குமார்முதல்வராக இருந்து வருகிறார். என்டிஏவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறார். இவரது ஆட்சியின் மீது ஊழல், கொரோனா மற்றும் வெள்ளம் ஏற்பட்டபோது திறம்பட செயல்படாதது, வேலை வாய்ப்பு இழப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது என்று ஏகபட்ட குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்படுகின்றன. இதனால், கூட்டணியில் இருக்கும் பாஜக இந்த முறை நிதிஷ் குமாரை கழற்றி விட்டு விடலாம் என்று யோசித்து வருகிறது. லோக் ஜனசக்தியுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் போட்டியிடலாம் என்று பாஜக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications