பீகார்: பாஜகவுக்கு குட்பை சொல்கிறதா ஜேடியூ? சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நிதிஷ்குமார் புதிய வியூகம்?
Recommended Video
பாட்னா: பீகார் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து ஜேடியூ (ஐக்கிய ஜனதா தள்) விலகக் கூடும் என்பதற்கான சமிக்ஞைகளை முதல்வர் நிதிஷ்குமார் வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார் என்கின்றன தகவல்கள்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொருவிதமான நிலைப்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். பீகாரில் கடந்த 2015-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடியுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கினார்.
இக்கூட்டணியும் அமோகவெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இது பாஜகவுக்கு பெரும் தோல்வியாக கருதப்பட்டது. ஆனால் ஆர்ஜேடியுடனான கூட்டணியை திடீரென முறித்துக் கொண்ட நிதிஷ்குமார் மீண்டும் பாஜகவுடன் கை கோர்த்துக் கொண்டார்.

மோடிக்கு எதிராக போர்க்கொடி
அதற்கு முன்னரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் ஜேடியூ இடம்பெற்றிருந்து. 2014 லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறியது ஜேடியூ.

அதிருப்தியில் பாஜக
அந்த வரலாறை மறந்துவிட்டு மீண்டும் மோடி தலைமையை ஏற்றுக் கொண்டது ஜேடியூ. இந்த கூட்டணியும் சர்ச்சைகளுடனும் சலசலப்புகளுடனும்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலின் போது பாஜகவுக்கு 17 இடங்களைத்தான் ஜேடியூ ஒதுக்கியது. இதற்கு பாஜகவில் கடும் எதிர்ப்பு உருவானது.

அமைச்சரவையில் ஜேடியூ அதிருப்தி
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ஜேடியூவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் கூடுதல் அமைச்சரவை இடங்களைக் கேட்டு போராடியது ஜேடியூ. பாஜக மேலிடம் இதற்கு மறுப்பு தெரிவிக்க அமைச்சரவையில் இடம்பெறமாட்டோம் என்றே அறிவித்தது ஜேடியூ.

பாட்னா சாலைக்கு நேரு பெயர்
இந்நிலையில் பாட்னாவில் சாலை ஒன்று நேருவின் பெயரை சூட்டியிருக்கிறார் முதல்வர் நிதிஷ்குமார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேருவின் கொள்கையை கூட்டணி கட்சியான பாஜக கடுமையாக தாக்கி வரும் நிலையில் நிதிஷ்குமார் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளவும் தயார் என்கிற ஜேடியூவின் சமிக்ஞைதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அதிரடி அரசியல் முடிவுகள்
இதனிடையே வறட்சி, வெள்ளம் போன்றவற்றை பீகார் அரசு சரியாக கையாளவில்லை என்கிற அதிருப்தி நிலவுகிறது. இந்த அதிருப்தியை சமாளிக்க சில அதிரடி அரசியல் முடிவுகளை எடுத்தாக வேண்டிய நிர்பந்தமும் நிதிஷ்குமாருக்கு இருக்கிறது. ஆகையால் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்குவதற்குள் பாஜகவுடனான கூட்டணிக்கு குட்ட்பை சொல்லிவிடுவார் நிதிஷ்குமார் என்றே கூறப்படுகிறது.
-
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்!












Click it and Unblock the Notifications