பீகார் சட்டசபைத் தேர்தலில் கோடீஸ்வரர்கள் மட்டுமல்ல குற்றவாளிகளும் இருக்காங்க பாஸ்
பீகார் சட்டசபை தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் 94 தொகுதிகளில் போட்டியிடும் கோடீஸ்வர குற்றவாளி வேட்பாளர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
பாட்னா: அரசியலில் களமிறங்க கோடீஸ்வரர்களாக இருக்க வேண்டும். அதோடு ஆள் அம்பு சேனை பலத்தோடு அடியாள்கள் அதிகம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். பீகாரில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் கட்சி வித்தியாசம் இல்லாமல் கோடீஸ்வரர்களும் குற்றவாளிகளும் களமிறங்குகின்றனர்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2020 இன் இறுதி கட்டத்திற்கான பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. பிரச்சாரத்தில் அனல் பறந்தது குற்றச்சாட்டுகளும் மாறி மாறி முன்வைக்கப்பட்டன. இன்றைய தினம் காலை 7 மணியில் இருந்து 17 மாவட்டங்களில் 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் நிதீஷ்குமார் அமைச்சரவையில் ஏழு அமைச்சர்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகிறது. ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஷ்வி யாதவ், ஆர்ஜேடி தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகன்களுக்கு இது ஒரு ஆசிட் டெஸ்ட் ஆக அமைந்துள்ளது.
இந்த சட்டசபைத் தேர்தலில் ஏராளமான கிரிமினல் குற்றவாளிகளும், கோடீஸ்வரர்களும் போட்டியிடுகிறார்கள். இன்றைய தினம் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் சுமார் 34% பேர் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை அறிவித்துள்ளனர்.
ஊழலற்ற நேர்மையான ஆட்சியைத் தருவோம் என்று சூளுரைக்கும் அரசியல்வாதிகள் தங்களின் கட்சியில் கோடீஸ்வர குற்றவாளிகள் போட்டியிடவே வாய்ப்பு தருகின்றனர். மூன்று வேட்பாளர்களில் ஒருவர் குற்றவழக்குகளில் தொடர்புடையவராக இருக்கிறார்.
ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, பாஜக, இந்திய தேசிய காங்கிரஸ், எல்ஜேபி என அனைத்து கட்சிகளிலும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்கள் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்லும் போது கோடீஸ்வர குற்றவாளிகள் கொண்ட சட்டசபையாக பீகார் மாநில சட்டசபை காட்சியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications