பீகார் பாஜகவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நிதிஷ்.. காலியாகும் காங்கிரஸ்.. சிஎன்என் கணிப்பு
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நிதிஷ் பாஜக கூட்டணி, தேஜஸ்வி காங்கிரஸ் கூட்டணி களத்தில் சீறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் போட்டியாளராக தன்னுடைய முதல் தேர்தலை சந்திக்கவுள்ளார். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. சிஎன்என் நியூஸ் 18 வெளியிட்டுள்ள கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த நவம்பர் 6 ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 64.66 சதவீதம் வாக்கு பதிவாகியிருந்தது. இன்று (நவம்பர் 11) 122 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

பீகார் தேர்தல் களம்
சுமார் 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தேசியளவில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அங்கு மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை பீகாரில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆளும் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்கிறது.
பரபரக்கும் களம்
மறுபக்கம் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது. அதேபோல பிரபல தேர்தல் வகுப்பாளரும், ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோரும் களத்தில் உள்ளார். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் பீகார் தேர்தல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
வாக்கு எண்ணிக்கை
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பின் சில முடிவுகளில் நிதிஷ்குமாரின் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன. வாக்கு சதவீத அடிப்படையில் பாஜக, அதற்கு அடுத்து ஆர்ஜேடி அதிக வாக்குகளை பெறும் என கூறப்பட்டது. முதல்வர் தேர்வில் தேஜஸ்வி யாதவுக்கு அதிகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கும். வருகிற நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. சிஎன்என் நியூஸ் 18 (CNN News 18) முதல் கட்ட தேர்தல் நடந்த 121 தொகுதிகளுக்கான கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஜேடியூ - பாஜக கூட்டணி 60-70 தொகுதிகளிலும், ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி 45 - 55 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொகுதிகள்
தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை நிதிஷ்குமாரின் ஜேடியூ 35-45 தொகுதிகளிலும் பாஜக 20-30 தொகுதிகளிலும், எல்ஜேபி 0-5 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று கூறியுள்ளனர். இந்தியா கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சி 25-35 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5-10 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட்கள் 10-15 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
நிதிஷ் சர்ப்ரைஸ்
பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட மற்றவர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டார்கள் என்று கூறியுள்ளனர். கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஜேடியூவை விட பாஜக அதிக வாக்குகளை வாங்கியிருந்தது. இந்தமுறை நிதிஷின் ஜேடியூ கட்சி பாஜகவை விட அதிக வாக்குகளை பெறுவது, அந்தக் கூட்டணிக்கு திருப்புமுனையாக வெற்றியை தேடி கொடுக்கும் என்று நியூஸ் 18 கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications