பீகார் தேர்தல்: ஜேடியூவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து ஆட்சி மன்ற குழுதான் முடிவெடுக்கும்- பாஜக
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துக்கான (ஜேடியூ) தொகுதிப் பங்கீடு குறித்து கட்சியின் ஆட்சி மன்ற குழுதான் இறுதி முடிவெடுக்கும் என்று அம்மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவல் இருப்பதால் சமூக இடைவெளியுடன் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தேர்தல் கூட்டணி தொடர்பான பரபரப்பும் பீகாரில் அரங்கேறி வருகிறது. காங்கிரஸ்- ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா (மதசார்பின்மை) வெளியேறியது.
அதேநேரத்தில் காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இணைந்தன. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிய கையோடு பாஜக-ஜேடியூவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜிதன் ராம் மஞ்சி கட்சி இணைந்தது. இதேபோல் நிதிஷ்குமாருடன் முரண்பட்டு நிற்கும் மூத்த தலைவர் சரத்யாதவும் ஜேடியூவுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பாட்னாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சியின் ஆட்சி மன்ற குழுதான் முடிவெடுக்கும் என தெரிவித்தார்.
Recommended Video
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications