பீகார் தேர்தலில் பதற்றம்.. லாலு கட்சி பலமாக உள்ள வாக்குச்சாவடிகளில் திடீர் மின்வெட்டு!
பாட்னா: பீகார் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வலுவாக உள்ள தொகுதிகளில் இருக்கும் வாக்குச்சாவடிகளில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசரி ஆகிய கட்சிகள் 'மகாபந்தன்' கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்நிலையில், இந்த கூட்டணி கட்சிகளின் கோட்டையாக கருதப்படும் வாக்குச்சாவடிகளில் இடையூறு ஏற்பட்டதாகவும், வாக்குப்பதிவை தாமதப்படுத்தும் நோக்கில் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூட்டணியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது சதி செயல் என்றும், தங்களது குற்றச்சாட்டின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. பீகார் தலைமை தேர்தல் அதிகாரி இது குறித்து கூறுகையில், "குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் முறைகேடு நடந்ததாக ராஷ்டிரிய ஜனதா தளம் எழுப்பிய குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது, தவறானது. பீகாரில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு சீராக நடைபெற்று வருகிறது. தேர்தல் செயல்முறை நியாயமாகவும், வெளிப்படையாகவும், தடையில்லாமலும் இருப்பதை உறுதிசெய்ய இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பின்பற்றுகிறது. இதுபோன்ற தவறான பிரச்சாரத்திற்கு ஆதாரம் இல்லை" என்று கூறியிருக்கிறார்.
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளில் இன்று முதல்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3.75 கோடி வாக்களார் வாக்களிக்கின்றனர். ஒரு திருநங்கை வேட்பாளர், 122 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் நேரடியான போட்டி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் இடையேதான் என்றாலும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி மற்றும் ஓவைசியின் கட்சி இரண்டும் கணிசமான அளவில் வாக்குகளை பிரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில், திஹாவில் அதிகபட்சமாக சுமார் 4.58 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஷேக்க்புரா மாவட்டத்தில் உள்ள பார்பிகா தொகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக 2.32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குர்ஹானி மற்றும் முசாபர்பூரில் அதிகபட்சமாக 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 3.75 கோடி வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் 45,341 வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளது. மொத்த வாக்காளர்களில் 10.72 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications