பால் பொருள் உற்பத்தி ஆலையில் விஷவாயு கசிவு..ஒருவர் பலி, 35 பேர் மயக்கம்.. பீகாரில் பரபரப்பு
பாட்னா: பீகார் மாநிலத்தின் வைஷாலி உள்ள மாவட்டத்தில் உள்ள பால் பொருள் உற்பத்தி தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்ததில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். இதில் பாதிக்கப்பட்ட 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராஜ் ஃப்ரெஷ் டெய்ரியில் உள்ள அம்மோனியம் சிலிண்டரில் இருந்து விஷ வாயு கசிந்தது. இந்த கோர சம்பவத்தில் ஒரு தொழிலாளர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.மேலும் ஏராளமானோர் மயக்கம் அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினர் உடனடியாக விஷவாயு கசிவதை தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கு பாதிக்கப்பட்டிருந்த 35 பேரை ஹாஜிபூர் சதர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சதார் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் ஷியாம் நந்தன் பிரசாத் கூறும் போது, விஷ வாயு தாக்கியதால் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் 30 முதல் 35 பேர் வரை மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது உடல் நிலையை கண்காணித்து வருகிறோம். அவர்கள் உடல் நிலை சீராக உள்ளது என்று கூறினார்.
இதனிடையே விபத்து குறித்து பீகாரின் தீயணைப்பு துறை டிஎஸ்பி,டாக்டர் அசோக்குமார் கூறுகையில், "ராஜ் ஃப்ரெஷ் டெய்ரி நிறுவனத்தில் இருந்து அம்மோனியம் சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
நிலைமையை கட்டுப்படுத்த பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். கசிவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது" இவ்வாறு கூறினார்.
இதனிடையே பீகார் மாநிலம் பாகல்பூரின் பாபர்கஞ்ச் பகுதியில் மர்மமான முறையில் வெடித்த குண்டுவெடிப்பில் ஒருவர் இறந்தார். இதில் மூன்று பேர் காயமடைந்தனர்.
பாகல்பூர் எஸ் எஸ்பி ஆனந்த் குமார், இதுபற்றி கூறுகையில், நேற்று மாலையில் சிலிண்டர் வெடித்ததாக தகவல் கிடைத்தது. FSL, SDRF மற்றும் தீயணைப்பு குழுவினருடம் சம்பவ இடத்திற்கு சென்றோம்.குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம். குண்டுவெடிப்பால் ஏற்பட்ட குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications