கயிறுக்கு ஆர்டர் கொடுத்தாச்சி.. அப்ப நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு?
Recommended Video
பாட்னா: பீகாரில் உள்ள பக்ஸார் சிறையில் 10 தூக்கு கயிறுகளை செய்து தருமாறு ஆர்டர் கொடுக்கப்பட்டுவிட்டது. இதனால் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து நிர்பயா பலாத்கார வழக்கில் ஈடுபட்ட 4 பேரையும் உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்த நிலையில் இவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் இவர்களுக்கு அடுத்த மாதம் தூக்குத் தண்டணை நிறைவேற்றப்படும் என தெரிகிறது. ஆனால் இவர்களை தூக்கிலிட ஹேங்க்மேன்தான் இல்லை என கூறப்பட்டது.

தூக்கு கயிறு
இந்த நிலையில் ஹேங்க்மேன் பணிக்கு தான் தயார் என ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுபாஷ் சீனிவாசன் என்பவர் திகார் சிறைத் துறைக்கு மனு அனுப்பியுள்ளார். பல்வேறு மாநில சிறைத்துறை சார்பில் 10 தூக்கு கயிறுகளை வரும் 14-ஆம் தேதிக்குள் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நீண்ட நாட்கள்
பக்ஸார் சிறையில்தான் அதிகமாக தூக்குக் கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாராகும் தூக்கு கயிற்றை உடனடியாக பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்து பயன்படுத்த முடியாது.

10 கயிறுகள்
இந்த கயிற்றை தயாரிக்க 3 நாட்கள் தேவைப்படும். அதில் இயந்திரங்களின் பயன்பாடு இல்லாமல் மனிதர்களைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது. கடந்த முறை இங்கிருந்து பெறப்பட்ட ஒரு கயிற்றின் விலை ரூ 1,725 ஆகும். இதுகுறித்து பக்ஸார் சிறைத் துறை கண்காணிப்பாளர் விஜய்குமார் அரோரா கூறுகையில் வரும் 14-ஆம் தேதிக்குள் 10 தூக்கு கயிறுகளை தயார் செய்து தருமாறு சிறைத் துறை இயக்குநரிடம் இருந்து கடந்த வாரம் உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளது.

4 கயிறு திகாருக்கா?
இவை எந்த சிறைகளில் பயன்படுத்த போகிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை என்றார். 10 தூக்கு கயிறுகளில் 4 கயிறுகளை திகார் சிறை ஆர்டர் செய்திருக்கலாம் என தெரிகிறது. இதன் மூலம் 2012-ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications