பீகார்: நிதிஷ்குமார் அமைச்சரவையில் பாஜகவுக்கு 21; ஜேடியூவுக்கு 12 இடங்கள்?
பாட்னா: பீகார் முதல்வராக 4-வது முறையாக பதவியேற்கும் நிதிஷ்குமார் அமைச்சரவையில் பாஜகவுக்கு 21 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார் தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றியது. இதனையடுத்து ஏற்கனவே அறிவித்தபடி நிதிஷ்குமாரையே மீண்டும் முதல்வராக பாஜக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்தனர்.
பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்.

இன்று பதவியேற்பு
பாட்னாவில் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4.30 மணிக்கு முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்கிறார். பீகாரில் 4-வது முறையாக முதல்வராகிறார் நிதிஷ்குமார். ஏற்கனவே 15 ஆண்டுகாலம் ஆட்சி நடத்தியவர் நிதிஷ்குமார்.

அமைச்சர்களாக 36 பேர்
இதனிடையே தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்றதால் நிதிஷ்குமார் அமைச்சரவையிலும் கூடுதல் இடங்கள் அந்த கட்சிக்கு கொடுக்கப்படுகிறது. நிதிஷ்குமார் அமைச்சரவையில் மொத்தம் 36 பேர் இடம்பெறுவர். அம்மாநில சட்டசபையின் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 243. இதில் 15% பேர் அமைச்ச்சர்களாக முடியும்.

பாஜகவுக்கு 60% இடம்
நிதிஷ்குமார் அமைச்சரவையில் பாஜக 60% இடங்களைப் பெற உள்ளது. அதாவது மொத்தம் 20 முதல் 21 பேர் பாஜகவின் அமைச்சர்களாக இருப்பார்கள். 11 முதல் 12 பேர் வரை ஜேடியூவை சேர்ந்தவர்கள். கூட்டணி கட்சிகளான விஐபி, ஹெச்ஏஎம் ஆகியவற்றுக்கு தலா 1 அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாம்.

ஜிதன்ராம் மஞ்சி மகன்
ஹெச்ஏஎம் தலைவரான முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி மகன் சந்தோஷ் சுமன் அமைச்சர் பதவிக்கு முயற்சிக்கிறாராம். சந்தோஷ் சுமன் இப்போது பீகார் சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார். முதல்வராகும் நிதிஷ்குமாரும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடாமல் எம்.எல்.சியாகவே இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications