‛‛எழுதி கூட தரேன்’’.. பீகாரில் பாஜக-ஜேடியூ கூட்டணி ஓராண்டு கூட நிலைக்காது.. பிரசாந்த் கிஷோர் குண்டு
பாட்னா: ‛‛பீகாரில் புதிதாக அமைந்துள்ள பாஜக-ஜேடியூ கூட்டணி ஓராண்டு கூட நிலைக்காது. இதனை நான் எழுதி கூட தருகிறேன்'' என தேர்தல் வியூக வகுப்பாளரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் பரபரப்பாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பீகாரில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியூ, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தன.

பீகார் முதல்வராக நிதிஷ் குமார் இருந்த நிலையில் துணை முதல்வராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் இருந்தார். இந்நிலையில் தான் ‛இந்தியா' கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் நிதிஷ் குமார் அந்த கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளார்.
தற்போது நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளார். இன்று காலையில் நிதிஷ் குமார் பீகார் ஆளுநரிடம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் வழங்கினார். மேலும் பாஜக ஆதரவுடன் புதிதாக ஆட்சியமைக்கவும் உரிமை கோரினார். இதன்மூலம் பீகாரில் நடந்து வந்த ஜேடியூ, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.
இன்று மாலையில் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக உள்ளார். அவருடன் 8 பேர் பதவியேற்க உள்ளனர். இதில் 2 பேர் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளனர். பாஜகவின் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர். 6 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
இந்நிலையில் தான் பீகாரில் நடந்த அரசியல் மாற்றம் குறித்து தேர்தல் வியூக வகுப்பாளரும், பீகாரை சேர்ந்தவருமான பிரசாந்த் கிஷோர் இன்று கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஜக-ஜேடியூ கூட்டணி பீகாரில் நீடிக்காது. விரைவில் இந்த கூட்டணி உடைந்துவிடும் என தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
பீகாரில் புதிதாக மீண்டும் பாஜக-ஜேடியூ கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி என்பது 2025ம் ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தல் வரை நீடிக்காது. அதாவது ஓராண்டு அல்லது அதற்கு முன்பாகவே முடிவுக்கு வந்துவிடும். தற்போது நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியின் முககமாக அறியப்படுகிறார். மேலும் பாஜகவின் ஆதரவு பெற்ற தலைவராக இருக்கிறார். இருப்பினும் இந்த கூட்டணி என்பது நிலைக்காது. இதனை நான் எழுதி தருகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications