தள்ளிவிட்ட குரங்கு.. மாடியில் இருந்து விழுந்த மாணவிக்கு நேர்ந்த கதி.. இப்படியெல்லாமா இறப்பு வரும்?
பாட்னா: பீகாரில் வீட்டு மாடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவியை குரங்கு கீழே தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மனிதராக பிறந்த நாம் அனைவரும் என்றாவது ஒருநாள் இந்த பூமியை விட்டு செல்லத்தான் போகிறோம். இதனால் தான் வாழும்போது இறப்பை பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

ஆனாலும் கூட இளம்வயது மரணம் உள்பட சிலரது இறப்புகள் என்பது நம்மால் தாங்க முடியாது என்பதோடு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். அப்படித்தான் ஒரு சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
மனிதனாக பிறந்தால் இப்படியெல்லாமா ஒருவருக்கு இறப்பு நேரிடும்? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அந்த சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய சோகமான தகவல் வருமாறு: பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் பக்வான்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட மஹார் கிராமத்தை சேர்ந்தவர் பிரியா குமார். இவருக்கு 15 வயது ஆனது. அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிரியா குமார் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது அவரது கிராமத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பிரியா குமார் தினமும் காலையில் சூரியன் உதயமான பிறகு குளிர்காயும் வகையில் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து பாடம் படித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று குரங்கு கூட்டம் வந்தது. இதில் பயந்து எஸ்கேப்பாக முயன்ற பிரியா குமாரை குரங்கு ஒன்று மாடியில் இருந்து கீழே தள்ளியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரியா குமார் இறந்தார்.
இதுபற்றி அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ‛‛பிரியா குமார் தனது வீட்டு மாடியில் அமர்ந்து பாடம் படித்து கொண்டிருந்தார். அப்போது குரங்கு கூட்டம் வந்தது. குரங்கை பார்த்ததும் பயந்த பிரியா குமார் படிக்கட்டு வழியாக மாடியில் இருந்து கீழே இறங்க முயன்றார்.
அப்போது ஒரு குரங்கு அவர் மீது பாய்ந்து ஆக்ரோஷமாக தள்ளியது. இதில் பிரியா குமார் கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டதோடு மயங்கினார். உடனடியாக குடும்பத்தினர் சிவான் சாதர் மருத்துவுமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனாலும் பிரியா குமார் இறந்துவிட்டார். எங்கள் கிராமத்தில் அவ்வப்போது குரங்குகள் கூட்டமாக வந்து மக்களை அச்சுறுத்தும். இப்போது குரங்கு கூட்டத்தால் மாணவியின் உயிரை போய்விட்டது'' என்று கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை பக்வான்பூர் போலீஸ் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிசர் சுஜித் குமார் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛சம்பம் பற்றி கேள்விப்பட்டோம். அங்கு சென்று விசாரணை நடத்தினோம். மாணவியை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறியிருந்தனர். உடலில் ஏற்பட்ட காயத்தால் மாணவி இறந்துள்ளார். மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அதேபோல் போலீசிலும் யாருக்கும் எதிராக புகார் அளிக்கவில்லை'' என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications