தலைமை தேர்தல் ஆணையருக்கும்.. மக்களுக்குமான போட்டியாம்! தோல்வியால் டோனை மாற்றிய காங்.
டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி என்டிஏ கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையரை காங்கிரஸ் விமர்சித்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை, ஞானேஷ் குமாருக்கும் இந்திய மக்களுக்கும் இடையேயான நேரடி போட்டி என்று காங்கிரஸ் தலைவரில் ஒருவரான பவன் கேரா குற்றம்சாட்டியிருக்கிறார்.
"இது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும் பீகார் மக்களுக்கும் இடையேயான போட்டி. நான் கூறியது போல, ஆரம்பக்கட்ட முடிவுகளை பொறுத்த அளவில், ஞானேஷ் குமார் பீகார் மக்களுக்கு எதிராக வெற்றி பெறுவது போல் தெரிகிறது. இந்தப் போராட்டம் பாஜக, காங்கிரஸ், ஆர்ஜேடி அல்லது ஜேடியு கட்சிகளுக்கு இடையேயானதல்ல. இது ஞானேஷ் குமாருக்கும் இந்திய மக்களுக்கும் இடையேயான நேரடிப் போராட்டம்.

இவை வெறும் ஆரம்பக்கட்ட முடிவுகள்தான். நாங்கள் சற்று காத்திருக்கிறோம். ஆரம்ப முடிவுகள் பீகார் மக்களுக்கு எதிராக கை ஓங்குவதாகவே காட்டுகிறது. பீகார் மக்களை நான் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எஸ்.ஐ.ஆர் இருந்தபோதிலும் அவர்கள் தைரியமாக வாக்களித்தார்கள். இப்போது, அடுத்த சில மணிநேரங்களில் ஞானேஷ்குமார் எவ்வளவு தாக்குப்பிடிப்பார் என்று பார்ப்போம்" என்று கூறியிருக்கிறார்.
வாக்கு எண்ணிக்கை 26-30 சுற்றுகளாக நடைபெற இருக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை 10 சுற்று நிறைவடைந்திருக்கிறது. இதில் பாஜக 84 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 76 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது. மற்றபடி ராஷ்டிரிய ஜனதா தளம் 35, காங்கிரஸ் 6 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. பீகாரில் ஆட்சி மாற்றத்திற்கான அலை வீசியதாகவும், பல இடங்களில் பாஜக தலைவர்கள் மக்களால் விரட்டியடிக்கப்பட்டபோதிலும், அவர்கள் எப்படி வெற்றி பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும் இது தேர்தல் ஆணையத்தின் "SIR வெற்றி" என்று விமர்சித்துள்ளார். அதேபோல மகாபந்தன் கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், "இன்னும் இறுதிப் போராட்டம் மீதமிருக்கிறது தோழர்களே...!" என்று கூறியதோடு கையில் தடியுடன் கூடிய புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications