தமிழக மாஜி டிஜிபி தோல்வி.. பீகார் காங்., களமிறங்கியவருக்கு விழுந்த அடி.. 50,000 ஓட்டு வித்தியாசம்
பாட்னா: தமிழகத்தின் முன்னாள் டிஜிபியாக பிரிஜ் கிஷோர் துபே என்ற பிகே ரவி 2023ம் ஆண்டில் ஓய்வு பெறுவதற்கு முன்பாக விருப்ப ஓய்வு பெற்றார். பிறகு சொந்த மாநிலமான பீகாருக்கு சென்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட்ட நிலையில் 50,522 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அரசியல்.. சாமானியன் முதல் படித்து உயர்பதவிகளில் இருப்பவர்கள் வரை அனைவரையும் களத்தில் இறக்கிவிடுகிறது. டாக்டர், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட பல உயர்பதவிகளில் இருப்பவர்களும் அரசியல் கட்சிகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதில் ஒரு சிலர் அரசியலில் வெற்றி பெறுகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் தோல்வியை சந்திக்கின்றனர்.

இதற்கு உதாரணமாக கூற வேண்டும் என்றால் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை விருப்ப ஓய்வு பெற்று பணியை ராஜினாமா செய்தார். தமிழகத்தில் பாஜகவில் இணைந்து நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் பாஜக மாநில தலைவர் பதவியை எட்டிப்பிடித்தார். தற்போது அதுவும் அவர் வசம் இல்லை.
அதேபோல் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சசிகாந்த் செந்தில் ராஜினாமா செய்து காங்கிரஸில் இணைந்தார். தற்போது அவர் எம்பியாக உள்ளார். இதனால் அரசியல் என்பது எல்லோருக்கும் எளிதில் வெற்றியை கொடுத்து விடாது. அந்த வகையில் தான்
தமிழகத்தின் முன்னாள் டிஜிபி தனது ஓய்வுக்கு 3 மாதம் இருந்தபோது விருப்ப ஓய்வு பெற்று காங்கிரஸில் இணைந்தார்
அவரது பெயர் பிரிஜ் கிஷோர் ரவி என்ற பிகே ரவி. இவர் தமிழக தீயணைப்பு துறையில் டிஜிபியாக இருந்தார். கடந்த, 1989ம் ஆண்டு தமிழக கேடரை சேர்ந்த இவர் பல்வேறு பொறுப்புகளில் வகித்து டிஜிபி வரை உயர்ந்தார். இவர் பீகாரை சேர்ந்தவர். 33 ஆண்டுகள் ஐபிஎஸ்ஸாக பணியாற்றிய பிகே ரவி 2023ல் ஓய்வுக்கு 3 மாதம் இருந்தபோது பணி ஓய்வு பெற்றார். அதன்பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
பிகே ரவி பீகாரில் உள்ள ரோசெரா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் நேற்றைய ஓட்டு எண்ணிக்கையில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் பிகே ரவியை எதிர்த்து பாஜகவின் பிரேந்திர குமார் போட்டியிட்டார். அவர் மொத்தம் 1 லட்சத்து 22 ஆயிரத்து 773 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் கட்சியின் பிகே ரவி மொத்தம் 72,240 ஓட்டுகள் மட்டுமே பெற்று 2ம் இடம் பிடித்தார். இதனால் பிகே ரவி, பாஜக வேட்பாளர் பிரேந்திர குமாரிடம் சுமார் 50,522 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது தோல்வியடைந்த பிகே ரவி பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை துல் மோகன் ராம் ஏற்கனவே பீகாரில் இருந்து காங்கிரஸ் சார்பில் 3 முறை எம்பியாகவும், ஒருமுறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். ஆனால் அவரது மகன் பிகே ரவிக்கு பீகார் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications