அரசு பள்ளியில் போஜ்புரி டான்ஸ்.. கவர்ச்சி உடையில் ஆடிய ஆபாச பெண்கள்.. வீடியோ வந்தாச்சு.. கொடுமை
பாட்னா: இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது.. இந்த வீடியோவை பார்த்ததுமே பெற்றோர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் கொந்தளித்து போயிருக்கிறார்கள். இதுகுறித்த நடவடிக்கையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த வாரம், பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க மாநாடும், கடந்த செப்டம்பர் 19 முதல் 21 வரை சென்னையில் தாஜ் கோரமண்டலில் நடந்தது. அகில இந்திய அளவிலிருந்து ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த மாநாட்டில், பெண் ஒருவர் மோசமான உடையணிந்து, ஆபாசமாக நடனமாடியிருந்தது, அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை தந்திருந்தது. குட்டியாக ஷார்ட்ஸ் மற்றும் மெல்லிய டாப்ஸ் அணிந்து கொண்டு, ஆபாச நடனஅசைவுகளுடன் அந்த பெண் ஆடினார்.
ஆண்கள்: பிறகு தன்னுடன் ஜோடி சேர்ந்து ஆடுவதற்கு, அங்கிருந்த ஆண்களையும் அழைத்தார்.. உடனே, பார்வையாளர்களில் 50, 60 வயதுடையவர்கள், கையில் மதுபானத்துடனேயே எழுந்து சென்று, அந்த பெண்ணுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினார்கள். சிலர் அந்த பெண்ணை பார்த்து விசில் அடித்தனர். இந்த வீடியோவை கண்ட பலரும், வயதான டாக்டர்கள் ஒரு பெண்ணை இப்படி கட்டிப்பிடித்து பொதுவெளியில் ஆடுவது சரியா? என்று கேட்டனர்., மேலும் சிலர், இதற்கு ஆதரவு தந்து பேசினார்கள்.
டாக்டர்களுக்கே இப்படியொரு சலசலப்பு என்றால், அரசு பள்ளியில், ஆபாசமாக நடனமாடியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பீகார் மாநிலத்தில், சஹர்சா மாவட்டத்தில் ஜலாய் என்ற பகுதி உள்ளது.. இங்கு அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது..
அரசு பள்ளி: பொழுதுபோக்கிற்காக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு இசைக்குழு மற்றும் சில பார் நடன பெண்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.. அந்த பெண்கள், ஆபாச நடனமாடியுள்ளனர்.
திருமண ஊர்வல நிகழ்ச்சிக்காக பள்ளி வளாகத்திலேயே, இந்த நடன நிகழ்ச்சி நடந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.. இதில், போஜ்புரி பாடல்களுக்கு 4 பெண்கள் ஆபாச நடனமாடும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த 4 பெண்களுடன், ஒரு சில ஆண்களும் குடித்துவிட்டு, அந்தப் பெண்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுகிறார்கள்.
கல்வித்துறை: அரசுப் பள்ளியில் இப்படியொரு விழாவை நடத்த கல்வித்துறை அனுமதித்தது எப்படி? என்று அந்த மக்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து ஜலாய் காவல் நிலைய பொறுப்பாளர் மம்தா குமாரி சொல்லும்போது, "இதுபோன்ற எந்த நிகழ்ச்சிக்கும் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. வைரலான வீடியோ எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications