வெறும் 27 ஓட்டில் போச்சே.. ஜேடியூ வேட்பாளரிடம் தோற்ற தேஜஸ்வி யாதவின் சிசியன் கண்ணீர்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்லில் ஒருவர் மிகக்குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெற்றுள்ளார். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சியை சேர்ந்த ராதா சரண் என்பவர் தன்னை எதிர்த்து களமிறங்கிய தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த வேட்பாளர் திபு சிங்கை வெறும் 27 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வாகை சூடியுள்ளார்.
பீகார் சட்டசை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆர்ஜேடி - காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்த ‛மகாகத்பந்தன்' கூட்டணி படுதோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் தான் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள், கட்சிகள் பெற்ற வாக்குகள் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வேட்பாளர் ஒருவர் 27 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பீகாரின் சந்தேஷ் (Sandesh) சட்டபை தொகுதியில் தான் இது நடந்துள்ளது.
இந்த சந்தேஷ் தொகுதியில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியூ) கட்சியின் சார்பில் ராதா சரண் என்பவர் வேட்பாளராக போட்டியிட்டார். அவரைஎதிர்த்து தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சியின் வேட்பாளர் திபு சிங் களமிறங்கினார். இன்றைய ஓட்டு எண்ணிக்கையின்போது இருவருக்கும் இடையே தொடக்கம் முதலே கடும் போட்டி நிலவி வந்தது.
இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். அதுமட்டுமின்றி இருவருக்கும் இடையேயான ஓட்டு சதவீதம், 100, 500, 1000, 2000 என்ற அளவில் மட்டுமே இருந்தது. இதனால் யார் வெல்வார்கள்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இறுதியாக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ராதா சரண் வெற்றி பெற்றார்.
ஜேடியூவின் ராதா சரண் மொத்தம் 80,593 ஓட்டுகள் வாங்கியிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சியின் திபு சிங் 80,571வாக்குகள் வாங்கி தோல்வியடைந்தார். இருவருக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் வெறும் 27 தான். இதனால் ஆர்ஜேடி கட்சியின் வேட்பாளர் திபு சிங் கண்கலங்கிப்போனார். அவரை ஆதரவாளர்கள் ஆறுதல் கூறி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications