பீகார்:14 ஜேடியூ எம்எல்ஏக்கள்..நிதிஷ் குமார் பதவி காலி? முதல்வர் பதவிக்காக லாலு மகன் தேஜஸ்வி அதிரடி!
பாட்னா: பீகார் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சி இரண்டாக உடையக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. ஜேடியூவின் 14 எம்.எல்.ஏக்கள் கலகக் குரல் எழுப்பி ராஜினாமா செய்துவிட்டால் நிதிஷ் குமாரின் முதல்வர் பதவி பறி போய் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் புதிய முதல்வராகும் நிலைமை உருவாகி உள்ளது.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஜேடியூ, ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ்குமாருக்கும் லாலு பிரசாத் யாதவுக்கும் கருத்து மோதல்கள் என கூறப்பட்டன. ஆனால் இதனை இருவருமே மறுத்து வந்தனர். நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்ட்டணிக்கு திரும்புவார்; இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவார் எனவும் கூறப்பட்டு வருகிறது. டெல்லியில் நாளை ஜேடியூவின் தேசிய கவுன்சில் கூட்டத்தையும் நிதிஷ்குமார் கூட்டியுள்ளார்.

இந்த நிலையில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர் ஒருவர் 11 ஜேடியூ எம்.எல்.ஏக்களுடன் ரகசிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷ் குமாருக்கு எதிராக இவர்கள் போர்க்கொடி தூக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை இழக்கும் நிலைமை உருவாகி உள்ளது.
நிதிஷ்குமாரின் முதல்வர் பதவியை பறிப்பதில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சிதான் தீவிரம் காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை மொத்தம் 122 எம்.எல்.ஏக்கள். தற்போது சட்டசபை கட்சிகள் நிலவரம்:
லாலுவின் ஆர்ஜேடி- 79
நிதிஷ்குமாரின் ஜேடியூ- 45
காங்கிரஸ் -19
இடதுசாரிகள் - 16
சுயேட்சை- 1
பாஜக - 78
ஹெச்.ஏ.எம்.எஸ்-4
தற்போதைய நிலையில் ஆர்ஜேடி + காங்கிரஸ் + இடதுசாரிகளுக்கு மொத்தம் 115 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவை 7 எம்.எல்.ஏக்கள்.
நிதிஷ் குமார் கட்சியின் 14 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தாலோ கலகக் குரல் எழுப்பியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ பீகார் சட்டசபை பலம் 243-ல் இருந்து 229 ஆக குறையும். அப்போது பெரும்பான்மைக்கு தேவை 115 எம்.எல்.ஏக்களாக இருக்கும். இதனால் ஜேடியூ ஆதரவு இல்லாமலேயே ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் பீகார் புதிய முதல்வராக பதவியை கைப்பற்றவும் முடியும். இந்த வியூகத்துடன் தான் லாலு கட்சி களமாடிக் கொண்டிருக்கிறது என்கின்றன பீகார் தகவல்கள்.
இதனால் பாஜக எம்.எல்.ஏக்கள் யாரும் குதிரைபேரத்தில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அத்தனை பேரையும் உடனடியாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அனுப்பும் நடவடிக்கையில் இறங்கிவிட்டது அக்கட்சி. இதனால் பீகாரில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications