மும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய உ.பி. இடம்பெயர் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
பண்டா: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு சென்ற இடம்பெயர் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் மியூசிவியான் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் (வயது 19). மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் சுனிலும் வேலை இழந்தார்.

இதனால் மும்பையில் இருந்து சுனில் உத்தரப்பிரதேசத்துக்கு 7 நாட்களாக சைக்கிளில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டிருந்தார் என ஒருதரப்பு செய்திகள் கூறுகின்றன. இன்னொரு தரப்பினர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பியிருந்தார் சுனில் என்றும் கூறுகின்றன.
மேலும் பிற மாநிலத்தில் இருந்து வந்தவர் என்பதால் 14 நாட்கள் வீட்டிலேயே சுனில் தனிமைப்படுத்தவும் செய்யப்பட்டார். இந்த நிலையில் சுனில் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக சுனில் குடும்பத்தினர் கூறுகையில், சுனில் ஊர் திரும்பிய போது அவரது பாக்கெட்டில் ஒரு பைசா கூட இல்லை; சுனிலின் தந்தையும் குஜராத்தில் சிக்கி இருக்கிறார். அடுத்து என்ன செய்வது என தெரியாமல் சுனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்கின்றனர். இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications