யார் வந்தாலும் ஓகே.. மோடி வரவே கூடாது.. பாஜக கூட்டணியில் எழும் முக்கிய தலைவரின் கலகக் குரல்!

பிரதமர் மோடிக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாக தேசிய அரசியலில் பேசிக்கொள்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பாஜக கூட்டணியில் எழும் முக்கிய தலைவரின் கலகக் குரல்!- வீடியோ

    பாட்னா: பிரதமர் மோடிக்கும் எதிராக பாஜக கூட்டணியிலேயே முக்கிய கலகக் குரல் ஒன்று எழுந்துள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள மிக முக்கியமான தலைவர் ஒருவர் மோடிக்கு எதிராக அணி திரட்ட தொடங்கியுள்ளார்.

    லோக்சபா தேர்தலுக்காக பீகாரில் பாஜக பெரிய கூட்டணியை அமைத்து இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், லோக் ஜன சக்தியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகிய முக்கிய கட்சி தலைவர்கள் பாஜக கூட்டணியில் சேர்ந்து இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் இந்த கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமாருக்கும், மோடிக்கும் இடையில் சிறிய உரசல் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது.

    என்ன உரசல்

    என்ன உரசல்

    பிரதமர் மோடிக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாக தேசிய அரசியலில் பேசிக்கொள்கிறார்கள். இதனால் பீகாரில் மோடிக்கு எதிராக காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நிதிஷ் குமார் இன்னும் சில நாட்களில் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.

    எப்படி இவர்கள்

    எப்படி இவர்கள்

    பிரதமர் மோடிக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இடையில், இருவரும் முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே பிரச்சனை இருக்கிறது. முக்கியமாக குஜராத் முதல்வராக இருந்து கொண்டு மோடி பிரதமர் ஆக ஆசைப்பட்ட சமயத்திலேயே அதை எதிர்த்தவர் நிதிஷ் குமார். ஆனால் கடைசியில் இவர்கள் உறவில் கொஞ்சம் சுமூகம் ஏற்பட்டு தற்போது ஒன்றாக கூட்டணி அமைத்து இருக்கிறார்கள்.

    சிக்கல் என்ன

    சிக்கல் என்ன

    ஆனால் தேர்தல் நிலவரம் 2014 போல இந்த முறை இருக்காது. 2014ல் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று தேர்தலில் வெற்றிபெற்றது. அதனால் நிதிஷ் குமாரின் தயவு பாஜகவிற்கு தேவையில்லாமல் போனது. ஆனால் இப்போது நிலைமை அப்படி கிடையாது. பாஜக இந்த முறை ஆட்சியை பிடிக்க மாநில கட்சிகளின் ஆதரவும் தேவை என்று கூறுகிறார்கள்.

    என்ன கணிப்பு

    என்ன கணிப்பு

    இதுவரை வந்துள்ள கருத்து கணிப்புகளின்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும் சரி, காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியாக இருந்தாலும் சரி இரண்டு கூட்டணியும் தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றிபெற முடியாது. இவர்கள் ஆட்சி அமைக்க மாநில கட்சிகளின் ஆதரவு தேவை.

    நிதிஷ் திட்டம்

    நிதிஷ் திட்டம்

    இங்குதான் நிதிஷ் குமார் மோடிக்கு எதிராக மீண்டும் குரல் கொடுக்க தொடங்கி உள்ளார் என்று தேசிய அரசியலில் பேசிக்கொள்கிறார்கள். அதாவது, பாஜகவிற்கு மாநில கட்சிகள் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால், மோடிக்கு பதிலாக வேறு ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று, நிதிஷ் குமார் இப்போதே கூறி வருவதாக பேசிக்கொள்கிறார்கள்.

    யார் வருவார்

    யார் வருவார்

    யார் வேண்டுமானாலும் வரட்டும், ஆனால் மோடி வர வேண்டாம் என்று நிதிஷ் குமார் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். பாஜக கூட்டணியில் நிதிஷ் குமாரும் இந்த பிரதமர் ரேஸில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக சமயங்களில் பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு, நிதிஷ் குமாருக்கு கூட பிரதமர் வாய்ப்பை அளிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    பேச போகிறார்

    பேச போகிறார்

    இது தொடர்பாக நிதிஷ் குமார் இன்னும் சில நாட்களில் பாஜகவிற்கு நெருக்கமான கட்சிகளுடன் பேச போகிறார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு முன் பாஜக நிதிஷ் குமாரை சமாதானம் செய்யவும் முயற்சி செய்யும். கூட்டணியில் குழப்பம் வேண்டாம் தேர்தல் முடிவுகளுக்கு பின் பேசலாம் என்று நிதிஷ் குமாரை பாஜக சமாதானம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+