பீகாரில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகாரில் ஆளுநரை நேரில் சந்தித்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார்.
பீகார் சட்டசபை தேர்தலில் 125 இடங்களை பெற்ற பாஜக கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாட்னாவில் நிதிஷ்குமார் இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து பீகார் ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்தார் நிதிஷ்குமார். அப்போது, பீகாரில் புதிய ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் ஆளுநரிடம் உரிமை கோரினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், முதல்வராக திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு பதவியேற்க உள்ளேன். ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றார்.
இதனிடையே பீகார் துணை முதல்வராக மீண்டும் சுஷில்குமார் மோடியே பதவி வகிப்பார் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications