எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த ராகுல்.. பாட்னாவில் காத்திருந்த தொண்டர்கள்.. உற்சாக வரவேற்பு
பாட்னா: எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் பாட்னாவில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என முழு வீச்சில் எதிர்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அதே வேளையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் பாஜக உள்ளது.

பாஜகவின் இந்த வியூகத்தை தவிடு பொடியாக்கி ஆட்சியை பிடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற திட்டத்தில் நிதிஷ் குமார் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசிவந்தார். இதன் அடுத்த கட்டமாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் பிரதிநிதிகளை அனுப்பக் கூடாது எனவும் ஏற்கனவே நிதிஷ் குமார் கண்டிப்பு காட்டியிருந்தார். அந்த வகையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, சரத்பவார் என தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
காலை 11.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. பாஜகவை வீழ்த்தும் வகையில், 400 தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சிகள கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் எனவும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்பட பல முக்கிய தலைவர்கள் நேற்றே பீகார் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பாட்னா சென்றனர். பாட்னா சென்ற ராகுல் காந்தி, கார்கேவுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கையில் ரோஜாப்பூக்களுடன் காத்திருந்த கட்சி நிர்வாகிகள் ராகுலுக்கு வணக்கம் செலுத்தி பூக்களை கொடுத்து வரவேற்னர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications