Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவை வீழ்த்த வியூகம்.. 16 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நிறைவு.. ஆலோசிக்கப்பட்டது என்ன?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் பீகாரில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 16 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பெற வேண்டும் என வியூகம் வகுத்து வருகிறது. தேர்தலுக்கான பணிகளை தற்போதே தொடங்கி முழு வீச்சில் அக்கட்சி செயல்பட தொடங்கியுள்ளது. பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என கங்கணம் கட்டியுள்ள எதிர்க்கட்சிகள், ஓரணியில் திரண்டால் இது சாத்தியப்படும் என பேசி வருகின்றன.

இதற்கான முயற்சியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக நிதிஷ்குமார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், லோக்சபா தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

 Opposition parties meeting in Bihar today: Rahul Gandhi, MK Stalin and others will participate

மதியம் 12.00 மணியளவில் கூட்டம் தொடங்கியது. நிதிஷ் குமார் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, முதல்வர் மு.க ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் தேசிய அளவில் உன்னிப்பாக கவனம் பெற்றது. 12 மணியளவில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாஜகவை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 16 கட்சித்தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆம் ஆத்மி சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த்மான், சஞ்செய் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத்பவார், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி ராஜா, மார்க்சிஸ்ட் லெனினஸ்ட் கட்சி சார்பில் தீபங்கர் பட்டாச்சார்யா ஆகியோரும் பங்கேற்றனர்.

அதேவேளையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி, ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், பஞ்சாப் சிரோமணி அகாலி தளம், உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+