ஆக்ஸ்போர்டு கோவிஷீல்டு... தடுப்பு மருந்து... மனித பரிசோதனை... தொடக்கம்!!
பாட்னா: பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்டு தடுப்பு மருந்து மனித பரிசோதனை பாட்னாவில் இருக்கும் ஆர்எம்ஆர்ஐ மருத்துவமனையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக பரிசோதிக்கப்படுகிறது.
Recommended Video
பிரிட்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்டு என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து தயாரிப்புக்கு இந்தியாவில் புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 17 மருத்துவமனைகளில் இந்த மருந்தை மனித பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக இந்த மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இந்தியாவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா பரிசோதனை மேற்கொள்ளும். இந்திய பரிசோதனையில் மனிதர்களிடம் எந்தளவிற்கு எதிர்ப்பு கிடைக்கிறது, பாதுகாப்பு கிடைக்கிறது என்பது குறித்து சோதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாட்னா ஆர்எம்ஆர்ஐ டாக்டர் பிரதீப் தாஸ் கூறுகையில், ''ஆரோக்கியமான 160 பேர் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். ஆண்கள், பெண்கள் என்று 18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மனித பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 0.5 என்ற அளவில் முதல் நாளில் டோஸ் ஊசி மூலம் செலுத்தப்படும். பின்னர் 29வது நாளிலும் இரண்டாவது டோஸ் அதே அளவில் செலுத்தப்படும். இவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து எந்தளவிற்கு வேலை செய்கிறது என்பது குறித்து 59 மற்றும் 180 நாட்களில் பரிசோதனை முடிவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
இந்த மருந்து டி செல்லை தூண்டி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். 14 நாட்களில் டி செல் தூண்டுதலும், 28வது நாளில் நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாகும். இத்துடன் நச்சுத்தன்மையும் ஆய்வு செய்யப்படும். கொரோனாவுக்கு எதிராக ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் இந்த பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த பரிசோதனையை ஏழு மாதங்களுக்குள் முடித்துவிடுவோம். ஐசிஎம்ஆர் - டெல்லி - சீரம் இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து இந்த பரிசோதனைக்கு ரூ. 55 கோடி கொடுக்கும்'' என்றார்.
இந்த தடுப்பு மருந்து பரிசோதனை பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய ஆண்டுகளில் மனித பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த மனித பரிசோதனைக்கு மும்பையில் இருக்கும் கெம், சண்டிகர் முதுகலை மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம், புனேவில் இருக்கும் ஜஹாங்கீர், டெல்லி எய்ம்ஸ், கோரக்பூர் ஐசிஎம்ஆர் மண்டல மருத்துவ ஆராய்ச்சி மையம், சேவாகிராம் மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம், நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் இந்த மனித பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications