லாலு பிரசாத் யாதவ் கையில் கருங்காலிக்குச்சி! மாயமில்லை மந்திரமில்லை! அப்படி என்ன தான் சக்தி இருக்கு?
பாட்னா: ஒரு காலத்தில் மாய மந்திர வேலைகள் பார்ப்பவர்களிடம் மட்டும் இருந்த கருங்காலிக்குச்சிகளை, அண்மைக்காலமாக அரசியல்வாதிகள் கைகளிலும் பார்க்க முடிகிறது.
எதிர்க்கட்சிகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பீகார் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மரியதை நிமித்தமாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை அவரது இல்லம் தேடிச்சென்று சந்தித்து பேசினார். அப்போது லாலு பிரசாத் யாதவ் அருகே உள்ள மேஜையில் அவர் பயன்படுத்தி வரும் கருங்காலிக்குச்சி வைக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சர் ஸ்டாலினும் கூட தனது காலை நேர நடைபயிற்சியின் போது கையில் கருங்காலிக்குச்சியை வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெங்கய்ய நாயுடு உட்பட இன்னும் பல அரசியல் தலைவர்கள் கருங்காலிக்குச்சியை பயன்படுத்தி வருகின்றனர்.
கருங்காலிக்குச்சிக்கு அப்படி என்ன தான் ஆற்றல் உண்டு என்ற கேள்வி பலருக்கும் எழலாம். கருங்காலி மரத்தை மற்ற மரங்களை போல் அவ்வளவு சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது. நாளாக நாளாக கருமை அடையக் கூடிய மரம் தான் இந்த கருங்காலிமரம். கருங்காலி மரத்தை பொறுத்தவரை எதையும் இழுத்து வைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
மின்னல் தாக்கினாலும் கூட கருங்காலி மரம் சேதமடையாது, காரணம் என்னவென்றால் அந்த மரம் இயல்பிலேயே மிகவும் உறுதியானது. உறுதியான உடல்கட்டு மிக்க நபரை கருங்காலி கட்டை மாதிரி இருக்கானே என கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. கருங்காலிக்குச்சி கையில இருந்தால் அதன் வீச்சு காரணமாக நம்பிக்கையும், மன உறுதியும் நமக்கு அதிகமாகும் எனக் கூறப்படுகிறது.
கருங்காலி மரமானது தேக்கு மரத்தை விட விலை உயர்ந்தது. அதேபோல் கருங்காலி மரத்தை பச்சைத் தங்கம் என்றழைக்கிறார்கள். அந்தளவுக்கு அந்த மரத்திற்கு மவுசு உள்ளது. கருங்காலிக்குச்சியின் சக்தி பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கக்கூடிய ஆற்றம் அதற்கு உண்டு.
மற்றபடி இந்தக் கோலில் மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். நல்ல சக்திகளை ஈர்க்கும் என்பதாலேயே அரசியல்வாதிகள் இந்தக் கோலை பயன்படுத்தி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications