அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்.. பீகார் மாணவருக்கு ரூ.1.8 கோடி சம்பளம்! அமேசானின் டாப் ஆஃபர்
பாட்னா: பீகாரை சேர்ந்த என்.ஐ.டி மாணவருக்கு ரூ.1.8 கோடி சம்பளத்தில் வேலை வழங்க அமேசான் நிறுவனம் முன்வந்து உள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவை சேர்ந்தவர் அபிசேக் குமார். அங்குள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனமான என்.ஐ.டியில் கணினி பொறியியல் படிப்பை படித்து வந்து உள்ளார். இறுதியாண்டில் இருந்து வரும் மாணவர் அபிசேக், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி கோடிங் தேர்வு ஒன்றில் கலந்துகொண்டு இருக்கிறார்.

அதில் வெற்றிபெற்ற மாணவர் அபிசேக், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு இருக்கிறார். 3 சுற்றுகளை கொண்ட அந்த நேர்காணலை அயர்லாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் நடத்தி இருக்கிறார்கள். இதில் அபிசேக் சிறப்பாக செயல்பட்டு நேர்காணலை நடத்தியவர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார்.
குறிப்பாக பிளாக் செயின் தொழில்நுட்பம் தொடர்பான விபரத்தை கூறி அவர்களை வியக்க வைத்து உள்ளார். 3 நேர்காணல்களிலும் வெற்றிபெற்ற அபிசேக்கிற்கு வேலை வழங்க உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் முன்வந்து இருக்கிறது. அமேசான் போன்ற நிறுவனத்தில் வேலை கிடைப்பதே பெரும்பாலான பொறியியல் மாணவர்களின் கனவாக இருக்கிறது.
இந்த சூழலில், அங்கு வேலை வாய்ப்பை பெற்ற அபிசேக்கிற்கு அந்த நிறுவனம் தர முன் வந்த ஊதியம்தான் அனைவரையும் வாய்பிளக்க செய்து இருக்கிறது. ஆம், ஆண்டுக்கு ரூ.1.8 கோடி ஊதியத்தை அபிசேக் குமாருக்கு வழங்க அமேசான் நிறுவனம் முன்வந்து இருக்கிறது. இதனை கேட்டு அனைவரும் மலைத்துப்போய் அபிசேக்கிற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆண்டுக்கு ரூ.1.8 கோடி ஊதியம் என்றால் ஒரு மாதத்துக்கு அவருக்கு ரூ.15 லட்சம் ஊதியம் வழங்குகிறது அமேசான் நிறுவனம். அமேசானில் அதிக ஊதியத்தை வேலை பெற்ற அபிசேக் குமாருக்கு இனிப்புகள் வழங்கி அவரது குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன் இதே பாட்னா என்.ஐ.டியில் படித்த ஒருவர் அதிக ஊதியத்துடன் பேஸ்புக் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
அவர் பெயர் அதிதி திவாரி. எலெக்டிரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் எஞ்சினியரிங் படித்த அவருக்கு பேஸ்புக் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1.6 கோடி ஊதியம் வழங்க முன்வந்தது. இவரது தாய் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். தந்தை டாடா ஸ்டீர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதிதிக்கு முன்பாக இதே பாட்னா என்.ஐ.டியில் படித்த சம்பிரீத்தி யாதவ் என்பவருக்கு கூகுள் நிறுவனத்தில் ரூ.1.11 கோடி ஆண்டு சம்பளம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications