தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்கும் சங்கராச்சாரியார்.. பீகாரில் பாஜகவுக்கு புதிய சிக்கல்!
பாட்னா: பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜோதிர் பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். பசு பாதுகாப்பு தொடர்பாக வலியுறுத்தி வரும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
பீகாரில் தற்போது ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே போட்டி நிலவ உள்ளது. பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் முக்கிய கூட்டணியாக உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் பிரதான கட்சியாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி இருக்கிறது. இதுதவிர இருகூட்டணியிலும் பிற கட்சிகளும் கைகோர்த்துள்ளன.
இந்நிலையில் தான் ஜோதிர் பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சங்கராச்சாரியார்களில் பிரபலமானவர்களில் ஒருவரான இவர் உத்தர பிரதேச மாநிலம் காசியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் தலைவர்களிடம் இருந்தும் பசு பாதுகாப்பு குறித்து கருத்துகளை கேட்டறிந்துள்ளேன். பசு பாதுகாப்புக்கு யார் உறுதுணையாக இருப்பார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் பீகார் சட்ட சபை தேர்தல் மட்டுமின்றி பிற தேர்தல்களிலும் பசு மாதா பெயரில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளேன்.
பசு மாதாவுக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் அவர்களுக்கு வாக்களிக்கலாம். பசு மாதா தேசியத் தாயாக வேண்டும் என்ற எங்கள் எண்ணம் மேலும் வலுப்பெற வேண்டும். அதுவே எங்கள் விருப்பம்" என்று கூறினார்.
சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் பசு பாதுகாப்புக்காக தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் மாட்டு இறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்.
மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது, பசு மாதாவுக்கு மாநில தாய் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது. இதுகுறித்து பேசிய சங்கராச்சாரியார், "மகாராஷ்டிரா முதலாவது மாநிலமாக பசு மாதாவுக்கு அரசு அந்தஸ்து வழங்கியதை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி இந்து மக்களின் ஓட்டுகளை அறுவடை செய்ய தயாராகி வருகிறது. இப்படியான சூழலில் சங்கராச்சாரியா சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இது பாஜக கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications