பீகாரில் அதிகாலையிலே சோகம்.. பாபா சித்தநாத் கோயிலில் கூட்ட நெரிசல்.. பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு
பாட்னா: பீகார் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் பகுதி கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். 35க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள மக்தும்பூர் பகுதியில் பாபா சித்தநாத் கோவில் உள்ளது. இந்த கோயிலில் இன்று காலை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் பக்தர்கள் 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல் கண்காணிப்பாளர் திவாகர் குமார் விஸ்வகர்மா, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது அங்குள்ள நிலைமையை கண்காணித்து வருகிறோம். அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது" என்றார். கோவிலில் கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் உத்தர பிரதேசத்தின் ஹத்ராசில் சாமியார் நாராயணன் ஹரி நடத்திய ஆன்மீக நிகழ்ச்சியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 120க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையும் அதிர வைத்தது. சிறிய இடத்தில் அதிக அளவிலான மக்கள் திரண்டதே கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட ஒரு காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications